சீன எல்லையில் இந்தியப் படைகள் குவிப்பு.. போர் பதற்றம் அதிகரிப்பு
சீன எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
டெல்லி: இந்திய சீன எல்லைப்பகுதியில் ராணுவ வீரர்கள் எண்ணிக்கையை இந்தியா உயர்த்தியுள்ளதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூட்டான் நாடுகள் சந்திக்கும் டோக்லாம் பகுதியில் சீனா சாலைகள் அமைக்கும் பணிகளை மேற்கொண்டது. இதனை இந்தியா தடுத்து நிறுத்தியது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் உருவாகியுள்ளது.

டோக்லாம் பகுதியில் இரு நாடுகளும் படைகளை குவித்து உள்ள நிலையில், இந்தியா தனது படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் எனச் சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெற முடியாது என இந்தியா திட்டவட்டமாக கூறிவிட்டது.
இரு நாடுகளுக்கும் இடையே வார்த்தைப் போர் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சீனா விடுக்கும் சவாலை சந்திக்க போதுமான வலிமை இந்தியாவிற்கு உள்ளது என பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லி உறுதியாகத் தெரிவித்தார்.
டோக்லாம் பகுதியில் இருந்து இந்திய தனது படைகளை திரும்பப் பெற வேண்டும் என்ற சீனா தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், டோக்லாம் அருகே உள்ள கிராமத்தில் இருந்து மக்கள் வெளியேற இந்திய ராணுவம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதனையடுத்து, சீனா ராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் எல்லையில் இந்திய படை வீரர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், எவ்வளவு வீரர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. இதனால் சீன எல்லைப் பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications