5 பேர் கடத்தல்.. சீனாவிற்கு ஹாட்லைன் மெசேஜ் அனுப்பிய இந்தியா.. அருணாச்சல் பிரதேசத்தில் பரபரப்பு
குவகாத்தி: ஐந்து பேரைக் கடத்தியதாகக் கூறப்படும் தகவல்கள் தொடர்பாக அருணாச்சல பிரதேசத்தின் எல்லைப் பகுதியில் சீன ராணுவத்திற்கு இந்திய ராணுவம் ஹாட்லைன் செய்தியை அனுப்பியுள்ளதாக மத்திய அமைச்சர் கிரெண் ரிஜிஜு தெரிவித்தார். சீனா இதற்கு பதில் அளிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்
Recommended Video
சீனா ராணுவம் லடாக் எல்லையில் அண்மைக்காலமாக அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. இதேபோல் பூடான் எல்லையிலும் அத்துமீறலில் ஈடுபட்டது. லடாக் எல்லையில் குறிப்பிட்ட நிலப்பரப்பை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்த சீன விரும்புகிறது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து எல்லையில் ராணுவத்தை குவித்துள்ளது. இரு தரப்பிலும் ராணுவம் குவிப்பால் பதற்றம் நீடிக்கிறது.
மாஸ்கோவில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்தியா சீனாவிடம் எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிளில் படைகளை உடனே வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தியது.

சீனா கடத்தல்
அருணாசலப் பிரதேசத்தில் அத்துமீறு ஊடுருவி 5 இந்தியர்களை சீன ராணுவம் கடத்திச் சென்றுவிட்டது. எல்லைப் பகுதியில் உள்ள அப்பர் சுபன்ஶ்ரீ மாவட்டத்தின் நாச்சோ என்ற கிராமத்தில் இருந்து 5 இந்தியர்களை சீன ராணுவம் கடத்தியதாக புகார் எழுந்துள்ளது.

கைது செய்வது இயல்பு
பொதுவாக சீன ராணுவம் பொதுவாக காடுகளில் வேட்டைக்குச் செல்லும் மக்கள் கணிக்க முடியாத நிலையில் எல்லையைக் கடந்து செல்லும் போது அவர்களை கைது செய்து அழைத்து சென்றுவிடுவார்கள். அதன்பின்னர் அவர்களை சீன விடுவித்து வருவது சகஜமான ஒன்று என்று கூறப்படுகிறது.

ராணுவத்துக்கு தெரியாது
இந்நிலையில் இந்த முறை காணாமல் போன 5 பேர் குறித்து எல்லை ராணுவ அதிகாரிகளுக்கு எந்த தகவலும் தெரியவில்லை. 5 பேர் காணாமல் போன நாச்சோ என்ற கிராமத்தில் 400 பேர்தான் வசிக்கின்றனர். இப்படி கடந்த மாதம் கடத்திய ஒருவரை பிற்பாடு பேச்சுவார்த்தைக்குப்பிறகு சீன ராணுவம் விடுவித்தது.

ஹாட் லைன் மெசேஜ்
எனவே ஐந்து பேர் கடத்தப்பட்டது குறித்து அறிய சீன ராணுவத்திற்கு இந்திய ராணுவ ஹாட்லைன் செய்தியை அனுப்பியுள்ளது. அதன் பதிலுக்காக காத்திருக்கிறது. இந்த தகவலை கிரெண் ரிஜிஜு தெரிவித்தார். இதனிடையே கடத்தப்பட்ட குழுவில் இருந்து 2 பேர் தப்பித்து வந்து போலீசாருக்கு தகவல் கொடுத்த பின்னரே 5 பேர் கடத்தப்பட்ட விவகாரம் வெளியே வந்துள்ளது.

கடத்தப்பட்டவர்கள் விவரம்
டோச் சிங்கம், பிரசாத் ரிங்லிங், டோங்டு எபியா, தனு பேக்கர் மற்றும் நகரு டிரி என ஐந்து பேர் கடத்தப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தாகின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications