உணவு கூட கிடைக்காமல் ஈராக்கில் அவதிப்படும் இந்தியர்கள்- தப்பி வந்தவர்கள் அதிர்ச்சித் தகவல்!
டெல்லி: ஈராக்கில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அந்நாட்டு அரசும் இந்திய தூதரகமும் கண்டு கொள்ளாமல் அலட்சியம் செய்வதாக அங்கிருந்து தப்பி வந்தவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
ஈராக்கில் ஷியா முஸ்லிம்களுக்கு எதிரான சன்னி முஸ்லிம்கள் உள்நாட்டுப் போரை நடத்தி வருகின்றனர். பல முக்கிய நகரங்கள் சன்னி முஸ்லிம்களின் ஆயுதப் படையான ஐ.எஸ்.ஐ.எஸ். வசமாகி உள்ளது.

இதனால் அங்கு பணிபுரிந்த 18 ஆயிரம் இந்தியர்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது. ஏற்கெனவே 39 இந்தியர்கள் தீவிரவாதிகளிடம் சிக்கியுள்ளனர். 40 செவிலியர்கள் திக்ரீத் நகரில் தவித்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து ஈராக்கில் உள்ள இந்திய தூதரகத்தில் 24 மணி நேர உதவி மையத்தை மத்திய அரசு திறந்துள்ளது. மேலும் அங்குள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க அந்நாட்டுக்கான முன்னாள் தூதர் சுரேஷ் ரெட்டியையும் அனுப்பி வைத்துள்ளது.
இந்த நிலையில் முகமது சையது அன்சாரி என்பவர் கத்தார் வழியாக இந்தியாவுக்கு தப்பி வந்துள்ளார். அவர் டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஈராக்கில் நிலைமை மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. மிக விரைவில் இந்தியர்களை அங்கிருந்து அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மற்றொரு இந்தியரான முகமது மெக்தாப் என்பவர், ஈராக்கில் நிலைமை வெகுமோசமாக உள்ளது. இந்திய தூதரகத்தினர் யாருமே எங்களுக்கு உதவி செய்ய தயாராக இல்லை. உணவு உட்பட எந்த வசதியுமே செய்து தரவில்லை. எங்களுடன் போனில் பேசக் கூட அவர்கள் தயாராக இல்லை என்று கூறியுள்ளார்.
-
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications