இஸ்ரோவுக்கு 'அமைதிக்கான காந்தி விருது'..பிரணாப் முகர்ஜி வழங்கினார்!
டெல்லி: இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோவிற்கு 2014ம் ஆண்டின் அமைதிக்கான காந்தி விருது வழங்கப்பட்டது. ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவரிடமிருந்து இஸ்ரோ தலைவர் கிரண்குமார் இந்த விருதைப் பெற்றுக் கொண்டார்.
விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி சார்ந்த சேவைகளில் இந்தியாவின் புகழை உலகளவில் உயர்த்தியது இந்திய விண்வெளி ஆய்வுக்கழகமான இஸ்ரோ. எனவே, இஸ்ரோவின் பணிகளைப் பாராட்டி கடந்தாண்டிற்கான ‘அமைதிக்கான காந்தி விருது' வழங்கப் பட்டது.

இந்த விருது வழங்கும் விழா ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது. அப்போது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் இருந்து விருதோடு, ஒரு கோடி ரூபாய் ரொக்கத்தையும், பாராட்டு சான்றிதழையும் பெற்றுக் கொண்டார் இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார்.
அதனைத் தொடர்ந்து பிரணாப் முகர்ஜி பேசியதாவது:-
இஸ்ரோ மிகச் சிறிய அளவில் துவக்கப்பட்டு, இன்று உலகின் மிகப் பெரிய 6 விண்வெளி ஆய்வு அமைப்புகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. மிகக் குறைந்த செலவில் செவ்வாய் கிரகத்திற்கு 'மங்கள்யான்' செயற்கைக் கோளை அனுப்பி, முதல் முயற்சியிலேயே அதன் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்திய நாடு என்ற பெருமையை இந்தியாவிற்கு பெற்றுத் தந்தது. இந்திய மக்களின் அடிப்படை தேவையான உணவு, குடிநீர், பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் சார்ந்த திட்டங்களை வடிவமைத்து சீரிய முறையில் இஸ்ரோ செயலாற்றி வருகிறது' எனப் பாராட்டினார்.
இந்த விழாவில், துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் அலுவலக அமைச்சர் ஜிதேந்திர சிங், பாஜக மூத்த தலைவைர் எல்.கே.அத்வானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications