சொத்துக் குவிப்பு தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் கேட்ட வக்கீல்..வரும் போது சொல்வோம்..நீதிபதி
சொத்துக் குவிப்பு தீர்ப்புகுறித்து தீர்ப்பு வரும் போது தெரிய வரும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
டெல்லி: சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு எப்போது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகளை அணுகி கர்நாடக அரசு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே கேட்டார். அதற்கு நீதிபதிகள், தீர்ப்புவரும்போது சொல்வோம் என்று பதிலளித்துள்ளனர்.
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் அப்பீல் மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு 8 மாதங்களாகி விட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் கர்நாடக அரசு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே நீதிபதிகள் அமித்தவ ராய், பி.சி. கோஷ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்சை அணுகி தீர்ப்பு எப்போது வரும் என்று கேட்டார். அதற்கு நீதிபதிகள் ஒரு வாரத்தில் எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்தனர்.

ஆனால் நீதிபதிகள் சொன்ன ஒரு வாரம் முடிந்து போய் விட்டது. இந்த நிலையில் இன்று மீண்டும் வழக்கறிஞர் தவே, பெஞ்ச்சை அணுகி தீர்ப்பு குறித்து நினைவூட்டிக் கேட்டார். அதற்கு நீதிபதி கோஷ் கூறுகையில், தீர்ப்பு வரும்போது உங்களுக்குத் தெரிவிப்போம் என்று கூறினார்.
அனேகமாக தீர்ப்பு நாளைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இன்று மாலை 6. 30 மணிக்குத்தான் நாளைய வழக்குகள் பட்டியல் வெளியாகும். எனவே அப்போதுதான் நாளை தீர்ப்பு வருமா என்பதும் உறுதியாகும்.
இந்தத் தீர்ப்பைத்தான் சசிகலா பெரிதும் எதிர்பார்த்துள்ளார். இந்தத் தீர்ப்பைக் காரண் காட்டித்தான் தமிழக பொறுப்பு ஆளுநரும் சசிகலாவை ஆட்சியமைக்க அழைக்காமல் உள்ளார். இந்த வழக்கைத்தான் தமிழக மக்களும் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications