சொத்துக் குவிப்பு தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் கேட்ட வக்கீல்..வரும் போது சொல்வோம்..நீதிபதி
சொத்துக் குவிப்பு தீர்ப்புகுறித்து தீர்ப்பு வரும் போது தெரிய வரும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
டெல்லி: சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு எப்போது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகளை அணுகி கர்நாடக அரசு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே கேட்டார். அதற்கு நீதிபதிகள், தீர்ப்புவரும்போது சொல்வோம் என்று பதிலளித்துள்ளனர்.
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் அப்பீல் மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு 8 மாதங்களாகி விட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் கர்நாடக அரசு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே நீதிபதிகள் அமித்தவ ராய், பி.சி. கோஷ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்சை அணுகி தீர்ப்பு எப்போது வரும் என்று கேட்டார். அதற்கு நீதிபதிகள் ஒரு வாரத்தில் எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்தனர்.

ஆனால் நீதிபதிகள் சொன்ன ஒரு வாரம் முடிந்து போய் விட்டது. இந்த நிலையில் இன்று மீண்டும் வழக்கறிஞர் தவே, பெஞ்ச்சை அணுகி தீர்ப்பு குறித்து நினைவூட்டிக் கேட்டார். அதற்கு நீதிபதி கோஷ் கூறுகையில், தீர்ப்பு வரும்போது உங்களுக்குத் தெரிவிப்போம் என்று கூறினார்.
அனேகமாக தீர்ப்பு நாளைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இன்று மாலை 6. 30 மணிக்குத்தான் நாளைய வழக்குகள் பட்டியல் வெளியாகும். எனவே அப்போதுதான் நாளை தீர்ப்பு வருமா என்பதும் உறுதியாகும்.
இந்தத் தீர்ப்பைத்தான் சசிகலா பெரிதும் எதிர்பார்த்துள்ளார். இந்தத் தீர்ப்பைக் காரண் காட்டித்தான் தமிழக பொறுப்பு ஆளுநரும் சசிகலாவை ஆட்சியமைக்க அழைக்காமல் உள்ளார். இந்த வழக்கைத்தான் தமிழக மக்களும் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
-
கையெழுத்தான வித்தியாசமான டீலிங்! தமிழ்நாட்டில் 5 முனை போட்டி.. யாருங்க இது புது டீம்? போட்டி தீவிரம் -
சசிகலா - ராமதாஸ் கூட்டணி வைத்தது எப்படி? இதற்கு இப்படி ஒரு பேர் வைக்க திட்டமா? அட போங்க! -
மனைவி வீட்டு வேலை செய்யாதது எல்லாம் ஒரு பிரச்சனையா? விவாகரத்து வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு!












Click it and Unblock the Notifications