ஜெ. விடுதலைக்கு எதிரான அப்பீல் வழக்கில் எப்போது 'க்ளைமாக்ஸ்' தீர்ப்பு?
டெல்லி: சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பு வழங்க காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இருப்பினும் ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக முதல்வராக 1991-96-ம் ஆண்டு காலத்தில் பதவி வகித்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளைக் குவித்தார் என்பது குற்றச்சாட்டு. இது தொடர்பான வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
18 ஆண்டுகள் பல்வேறு இழுத்தடிப்புகளுடன் இவ்வழக்கு நடைபெற்றது. கடந்த 2014-ம் ஆண்டு இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி குன்ஹா ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் உள்ளிட்டோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்தனர்.

சர்ச்சை தீர்ப்பு
இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்ற தனிநீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்து அதிரடியாக தீர்ப்பளித்தார். இத்தீர்ப்பு பெரும் சர்ச்சையை கிளப்பியது. நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பில் வெளிப்படையாகவே கணக்குப் பிழைகள் இருப்பதும் சுட்டிக்காட்டது.

சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல்
இதன் பின்னர் ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுதலையை எதிர்த்து கர்நாடகா அரசும் திமுக பொதுச்செயலர் அன்பழகனும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இம்மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. கர்நாடகா அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் துஷய்ந்த் தவே, பிவி ஆச்சார்யா ஆகியோர் ஆஜராகி தமது வாதங்களள எடுத்து வைத்தனர்.

நீதிபதிகள் கேள்வி
அப்போது நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வாதாடினர். ஆனால் ஜெயலலிதா தரப்பிலோ வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிக்கப்படவில்லை; கூடுதல் வருமானம் என்பது வங்கிகளில் கடனாகப் பெற்ற தொகைதான் என்கிற வாதத்தை முன் வைத்தது. மேலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பது தவறல்ல.. அந்த பணம் ஜெயலலிதாவுடையதுதானா? என உச்சநீதிமன்ற நீதிபதிகளும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

ஆகஸ்ட்டில் தீர்ப்பு?
இந்நிலையில் இன்று இவ்வழக்கின் விசாரணை மீண்டும் நடைபெற்றது. அப்போது அனைத்து தரப்பும் எழுத்துப்பூர்வமாக வாதங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இத்தீர்ப்பு வழங்குவதற்கான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
அதே நேரத்தில் ஆகஸ்ட் மாதம் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படக் கூடும் என்று டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications