ஜோதிராதித்யாவே கட்சியிலிருந்து விலகியாச்சு.. அப்புறமா வெளியேற்றுறாங்களாம்.. காங்கிரஸ் செம
போபால்: காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜோதிராதித்ய சிந்தியா நீக்கப்படுவதாக காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. அவர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்த பிறகு இந்த அறிவிப்பை காங்கிரஸ் கட்சி தலைமை வெளியிட்டுள்ளது.
Recommended Video
தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன், ஜோதிராதித்ய சிந்தியா, அவுட் ஆப் ரீச் ஆன நிலையில், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி ஆட்டம் கண்டது. இந்த நிலையில், பிரதமர் மோடியை சந்தித்தார், ஜோதிராதித்ய சிந்தியா. இதையடுத்து அரசியலில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சந்திப்புக்கு பிறகு, காங்கிரசின் அடிப்படை உறுப்பினர் பதவியையும், ராஜினாமா செய்வதாக அறிவித்தார் அவர். ராஜினாமா கடிதத்தை சோனியாவுக்கு அனுப்பினார்.
18 வருடங்களாக காங்கிரஸ் உறுப்பினராக இருந்துள்ளேன். இப்போது விலக வேண்டிய நேரம் வந்துவிட்டது. கடந்த ஒரு வருடமாக இந்த பாதை அதுவாகவே உருவாகிவிட்டது.
இந்த நாட்டின் மற்றும் மாநிலத்தின் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற கொள்கை ஆரம்பத்தில் இருந்தே எனக்கு உள்ளது. இந்த கட்சியில் இருந்து கொண்டு இனியும் அதை செய்ய முடியாது என நம்புகிறேன். எனது மக்களுக்காக நான் புதிய ஆரம்பத்தை தொடங்குகிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதம் ஊடகங்களில் வெளியான அடுத்த சில நிமிடங்களுக்கு பிறகு, ஜோதிராதித்ய சிந்தியாவை காங்கிரசிலிருந்து நீக்குவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. கட்சி விரோத நடவடிக்கை என்று இதற்கு காரணம் கூறப்பட்டுள்ளது. கட்சி பொதுச் செயலாளர் வேணுகோபால் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
KC Venugopal, Congress: The Congress President has approved the expulsion of Jyotiraditya Scindia from the Indian National Congress with immediate effect for anti-party activities. https://t.co/NpsGIvfmJR pic.twitter.com/AF10ZyqtJE
— ANI (@ANI) March 10, 2020
சிந்தியா ராஜினாமா செய்த பிறகு, கட்சியை விட்டு தூக்குவதாக அறிவித்துள்ளது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications