இந்தியாவுக்குள் ஒடுக்குமுறைகளில் இருந்து தான் சுதந்திரம் கோருகிறோம்... 'ஜேஎன்யூ' கன்னையா கர்ஜனை
டெல்லி: நாங்கள் இந்தியாவுக்குள் அனைத்து ஒடுக்குமுறைகளில் இருந்துதான் விடுதலை கோருகிறோமே தவிர இந்தியாவை விட்டு போவதற்காக அல்ல என்று சிறையில் இருந்து விடுதலையான டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையாகுமார் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆனால் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டது அநீதியானது என்ற குரலும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

கடந்த மாதம் அப்சல் குருவுக்கு நீதி கோரி அவர் தூக்கிலிடப்பட்ட நாளில் டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழக (ஜேஎன்யூ) மாணவர்கள் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். ஆனால் இந்துத்துவா அமைப்பினரோ, இந்தியாவுக்கு எதிராக; பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பி இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக புகார் தந்தது.
இதனைத் தொடர்ந்து ஜே.என்.யூ. மாணவர் சங்கத் தலைவர் கன்னையாகுமார் மீது தேசதுரோக வழக்கு பாய்ந்தது. அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கன்னையாகுமார் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட போது இந்துத்துவாவாதிகள் அவரைத் தாக்கினர்.
பின்னர் கன்னையாகுமார் முழக்கங்கள் எழுப்பிய வீடியோவில் "தேசதுரோக முழக்கங்களை" சில ஊடகங்கள் சேர்த்து வெளியிட்டிருந்தது அம்பலமானது. இந்நிலையில் கன்னையாகுமாருக்கு 6 மாத இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதனைத் தொடர்ந்து டெல்லி திகார் சிறையில் இருந்து விடுதலையானார் கன்னையாகுமார்.
விடுதலையான கன்னையாகுமார், தம் மீதான ஒடுக்குமுறைகளைக் கண்டு கிஞ்சித்தும் தளராத ஒரு போராளியாக மாணவர்களிடையே நேற்று உரையாற்றினார். ஜேஎன்யூ மாணவர்கள் மத்தியில் கன்னையாகுமார் உரையாற்றியதாவது:
நாங்கள் இந்தியாவுக்குள்தான் சுதந்திரம் கேட்கிறோம்.... இந்தியாவை விட்டு போவதற்காக சுதந்திரம் கேட்கவில்லை.
ஒடுக்குமுறைகள், வறுமை, ஏழ்மை, ஊழல், பெண்கள்- சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளில் இருந்து விடுதலை வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்பவில்லையா?
நாம் நம்மை ஒடுக்குகிற அனைத்துக்கும் எதிராக போராட வேண்டும். சமூக, அரசியல், பொருளாதார விடுதலை கோருகிற கன்னையாக்கள், ரோஹித் வெமுலாக்களின் குரல்களை வல்லரசாக விரும்புகிற இந்திய அரசு செவிகொடுத்து கேட்க வேண்டும்...
எங்களைப் போன்ற இளைஞர்களை தற்கொலைக்கு தூண்டுவதையோ சிறையிலடைப்பதையோ கைவிடுங்கள்... ஒடுக்குமுறைகளில் இருந்து விடுதலை கோருகிற எங்கள் மீது தேசதுரோக சட்டம் பாயுமேயானால் சிறை செல்ல தயாராக இருக்கிறோம்..
எங்களை எதிர்க்கிற ஏபிவிபி தோழர்கள் எமக்கு எதிரிகள் அல்ல... ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளுடன் ஆரோக்கியமான விவாதம் நடத்துவது அவசியமான ஒன்று... ஆகையால் ஏபிவிபியினரை விவாதத்துக்கு அழைக்கிறேன். வாருங்கள் விவாதிப்போம்...
அநீதிக்கு எதிரான ஜேஎன்யூ மாணவர்கள் குரலை நரேந்திர மோடி அரசு நசுக்க நினைக்கிறது... ஆனால் அதில் ஒருநாளும் அவர்களால் வெல்ல முடியாது.
இவ்வாறு கன்னையாகுமார் பேசினார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications