கார்கில்... எண்ணற்ற இந்திய வீரர்களின் உயிரைக் காத்த இந்தியப் பெருஞ்சுவர்!
- ரிச்சா பாஜ்பாய்
கார்கில்: கார்கிலில் 1999ம் ஆண்டு நடந்த போரின்போது பல இந்திய வீரர்களின் உயிரைக் காத்த இந்தியாவின் நெடுஞ்சுவர் குறித்து உங்களுக்குத் தெரியுமா...
இந்த சுவரை இந்திய வீரர்கள் ஒரே இரவில் மின்னல் வேகத்தில் கட்டிய கதை தெரியுமா.. மிகுந்த சுவராஸ்யமானது இது.. அத்தோடு பல இந்திய வீரர்களின் உயிரையும், நமது அருமையான தீரர்களையும் இந்த சுவர்தான் காத்தது என்பது வியப்பானது.
ஒரு பெரிய லாரியின் உயரத்திற்கு இந்த சுவரை இந்திய வீரர்கள் ஒரே இரவில் கட்டி நமது படையினருக்கு வரவிருந்த மிகப் பெரிய இழப்புகளை சாதுரியமாக தடுத்து நிறுத்தினர்.

தேசிய நெடுஞ்சாலை 1
பாகிஸ்தான் ஊடுறுவல் படையினர், இந்திய வீரர்களை மட்டும் குறி வைக்கவில்லை. மாறாக, தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் சென்ற ராணுவத்தின் லாரிகளையும், போக்குவரத்து வாகனங்களையும்தான் முக்கியமாக குறி வைத்தனர்.

சப்ளையைத் தடுப்பது நோக்கம்
இந்தியப் படையினருக்கான உணவு, ஆயுத சப்ளையைத் தடுத்து இந்தியப் படையை திணறடிப்பதே பாகிஸ்தானியரின் குறிக்கோளாக இருந்தது.

மின்னல் வேகத்தில் உயர்ந்த சுவர்
இதை அறிந்த இந்தியப் படையினர், உடனடியாக அந்த சாலையில் மிகப் பெரிய, உயரமான சுவரைக் கட்டினர். லாரிகள் போவது தெரியாத அளவுக்கு மிகவும் உயரமாக அது கட்டப்பட்டது.

ஒரே இரவில்
இந்த சுவரை ஒரே இரவில் நமது வீரர்கள் கட்டியதுதான் விசேஷமானது.

குண்டு வீச்சையும் தாங்கும்
இந்த சுவர் மிகவும் வலிமையாக கட்டப்பட்டது. எந்தவிதமான குண்டு வீச்சையும் தாங்கக் கூடிய வகையில் அதைக் கட்டினர் இந்தியப் படையினர்.

இந்தியப் பெருஞ்சுவர்
இந்த சுவரை இந்தியப் பெருஞ்சுவர் என்று இந்தியப் படையினர் அழைக்கிறார்கள். கார்கில் போரின்போது இந்த சுவர், நமது படையினரை பெருமளவு காத்தது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications