சிறை அதிகாரிக்கு சசிகலா ரூ.2 கோடி லஞ்சம்: மீண்டும் விசாரணை நடத்த கர்நாடகம் முடிவு
சிறை அதிகாரிக்கு சசிகலா ரூ2 கோடி லஞ்சம் கொடுத்தது தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்த கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது.
பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா அங்கு சொகுசாக இருக்க சிறை அதிகாரிக்கு ரூ2 கோடி லஞ்சம் கொடுத்தது தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்த கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு சிறையில் 4 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். ஆனால் பெங்களூரு சிறையில் சசிகலா சொகுசாக இருப்பதாக சிறைத்துறை டிஐஜி ரூபா தகவலை வெளியிட்டார்.

அத்துடன் சிறையைவிட்டு வெளியே போய் ஷாப்பிங் செய்துவிட்டு சசிகலா திரும்பும் வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இது தொடர்பாக ஓய்வுபெற்ற அதிகாரி வினய்குமார் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்திருந்தார்.
அந்த அறிக்கையிலும் சசிகலாவுக்கு சிறையில் தனி சமையல் அறை இருந்தது உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றிருந்தன. இருப்பினும் சிறை அதிகாரிகளுக்கு ரூ2 கோடி சசிகலா லஞ்சம் கொடுத்தார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த டி.ஐ.ஜி. ரூபா, ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பாக ஊழல் தடுப்பு பிரிவினர் விசாரிக்க வலியுறுத்தியிருந்தார். இதையடுத்து சசிகலா கொடுத்த ரூ.2 கோடி லஞ்சம் தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்த கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications