பக்ரீத் விற்பனைக்கு வாங்கிய மொத்த துணிகளையும்.. வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு கொடுத்த வியாபாரி
கொச்சி: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வியாபாரம் செய்வதற்காக வாங்கி வந்து துணிகளை வியாபாரி ஒருவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக அதை இலவசமாக வழங்கியுள்ளார்.
கேரளாவில் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கிய போது பெரிதாக மழை இல்லை. ஏன் ஜூலை மாதம் கூட பெரிதாக மழை இல்லை. ஆனால் ஆகஸ்ட் மாதம் தென்மேற்கு பருவமழை இரண்டாவது ரவுண்டில் கேரளாவை மிகஉக்கிரமாக தாக்கியுள்ளது. கேரளா மட்டுமின்றி, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்திலும் மிகமிக கனமழை பெய்தது.

குறிப்பாக கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி இதுவரை கேரளாவில் 72 பேர் உயிரிழந்ததுள்ளனர். 58 பேரை காணவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2.5 லட்சம் பேர் சிறப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் கனமழையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பது வயநாடு மாவட்டம் தான். அங்கு தான் ஏரளானமான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன.
இந்நிலையில் மழை வெள்ளம் காரணமாக கேரளாவில் பல்வேறு இடங்களில் மக்கள் தங்கள் உடமைகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர். பக்ரீத் பண்டியையும் அவர்களால் கொண்டாட முடியாமல் தவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், வியாபாரி நவ்ஷத் என்பவர் பக்ரீத் வியாபாரத்துக்காக உடைகளை வாங்கி வந்திருந்தார். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தான் வாங்கிய அனைத்து உடைகளையும் இலவசமாக வழங்கியுள்ளார். எர்ணாகுளத்தல் உள்ள மாட்டச்சேரியில் கடை வைத்திருக்கும் நவுஷத் மக்களுக்காக உடைகளை கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த உடைகளை நடிகர் ராஜேஷ் சர்மா தலைமையிலான தன்னார்வ குழுவினர் வாங்கி சென்று வெள்ளத்தால் பாதித்த மலபார் பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி நவுஷத் கூறும்போது, கேரளாவில், கடந்த முறை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டபோதும் இதை நான் செய்தேன். இப்போதும் செய்கிறேன். இவை அனைத்தும் எனக்கு கடவுளால் கொடுக்கப்பட்டது. அதை மக்களுக்கு திருப்பிக் கொடுக்கிறேன். எனக்கு இதுவே மகிழ்ச்சி" இவ்வாறு கூறினார்.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications