கோவில்களில் ஆர்எஸ்எஸ் கூட்டங்கள் நடத்த கேரள அரசு அதிரடி தடை!
திருவனந்தபுரம்: கேரளாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் கோயில்களில் நடைபெற்று வரும் 5000 ஷாகாவிற்கு தடை விதிக்க ஆளும் இடதுசாரிகள் அரசு திட்டமிட்டுள்ளது. இது கேரள ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக ஆகிய அமைப்புகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிலேயே மிக அதிக அளவில் ஷாகாக்கள் நடைபெறும் இடங்களில் கேரளாவும் ஒன்று. இங்கு சுமார் 5000 ஷாகாக்கள் கோயில்களில் நடத்தப்படுகின்றன. இந்த ஷாகாக்கள் மூலம் கோயில்களுக்கு வரும் பக்தர்கள் உள்ளிட்ட பலருக்கும் சட்டத்திற்கு விரேதமாக ஆயுதப் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அமைதியாக இருக்கும் கேரளா கலவர பூமியாக மாறும் வாய்ப்பு உருவாகி வருகிறது. எனவே, ஆர்எஸ்எஸ் ஷாகாக்களுக்கு தடை விதிக்க அம்மாநில அரசு திட்டம் தீட்டி வருகிறது.

"கேரளாவில் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் ஷாகாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஷாகாக்கள் மூலம் கடுமையான ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனை அரசு ஒருபோதும் அனுமதிக்காது. எனவே, ஷாகாக்களுக்கு தடையை கொண்டு வர உறுதியான சட்டம் ஒன்று கொண்டு வர உள்ளோம்" என்று கோயில்கள் விவகாரத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து, பாஜக மாநிலத் தலைவர் குமணன் ராஜசேகரன், இங்கு ஆளும் கம்யூனிஸ் கட்சியில் உள்ளவர்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. சங்பரிவாரின் நடவடிக்கைகளை கேரளாவில் கட்டுப்படுத்த நினைக்கும் அவர்களின் எண்ணம் பலிக்காது என்று கருத்து தெரிவித்துள்ளார்.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டவரை.. ரூ.34 கோடி 'ரத்த பணம்' செலுத்தி மீட்ட கேரள மக்கள் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications