பெங்களூரில் வரும் 25ம் தேதி வரை மதுக்கடைகள் மூடல்.. காவல்துறை அறிவிப்பு!
பெங்களூர்: காவிரி விவகாரம் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரில் மதுக்கடைகள் கடந்த இரு தினங்களாக மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் மீண்டும் வரும் 25 ஆம் தேதி வரை மதுக்கடைகளை மூட காவல் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்திற்கு காவிரியில் மேலும் தண்ணீர் திறக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. தமிழகத்துக்கு காவிரியில் இன்று முதல் 27-ந் தேதி வரை வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் திறக்க கர்நாடகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரத்துக்குள் அமைக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஏற்கனவே நடந்த வன்முறையில் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பேருந்துகளும் தீவைத்து கொளுத்தப்பட்டன. இதனால் பாதுகாப்பு கருதி அசம்பாவி சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக மதுக்கடைகள் மூடப்படுகின்றன. வரும் 25 ஆம் தேதி வரை மதுக்கடைகளை மூட மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக நேற்று காலை 6 மணி முதல் இன்று நள்ளிரவு 1 மணி வரை இரண்டு நாட்களுக்கு மதுக்கடைகளை மூட காவல் துறை உத்தரவிட்டது. இந்நிலையில் மேலும் 4 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை.. 202 போதைப்பொருள் குற்றவாளிகள் உட்பட 1,328 பேர் கைது! -
திருச்செந்தூர் போலீஸ் ஏட்டுக்கு பெண்ணால் வில்லங்கம்.. வாட்ஸ் அப் சாட்டால் வாழ்க்கைக்கே சிக்கல் -
“சிறையில் சலுகை கிடையாது” சாத்தான்குளம் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 போலீசாரின் மனு தள்ளுபடி! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா?












Click it and Unblock the Notifications