கையில் இருப்பது எல்லாம் வெறு ரூ.100 தான்: இப்படியும் ஒரு வேட்பாளர்
டெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிலேயே டெல்லி தொகுதி வேட்பாளரான ராமானுஜன் பட்டேல் தான் மிகவும் ஏழை ஆவார். அவரிடம் கையிருப்பு உள்ள பணம் ரூ.100 மட்டுமே.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளர்கள் தங்களின் சொத்து விவரங்களை கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.
இந்நிலையில் டெல்லி தொகுதியில் போட்டியிடும் பத்திரிக்கையாளரான ராமானுஜன் பட்டேல்(37) தன்னிடம் வெறும் ரூ.100 இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
என்னிடம் வங்கிக் கணக்கு இல்லை. ஆனால் தேர்தலில் போட்டியிட வங்கியில் கணக்கு துவங்க வேண்டுமாம். வேட்புமனு தாக்கல் செய்ய எனது வங்கி விவரங்கள் வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு துவங்க ரூ.1,000 வேண்டுமாம். ஆனால் என்னிடம் ரூ.100 தான் உள்ளது என்றார். அவர் கடன் வாங்கி வங்கியில் கணக்கு துவங்கியுள்ளார்.
தேர்தலில் போட்டியிட செலுத்த வேண்டிய ரூ.25 ஆயிரம் டெபாசிட் பணத்தை தனக்கு 16 பேர் அளித்ததாக பட்டேல் தெரிவித்தார். சம்யக் பரிவர்தன் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் அவர் கிழக்கு டெல்லியில் உள்ள ஷகார்பூரில் 2 அறைகள் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். அவருடைய அலுவலகமும் அது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டேல் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் மக்கென், ஆம் ஆத்மி கட்சியின் ஆசிஷ் கைதான் மற்றும் பாஜகவின் மீனாக்ஷி லெகி ஆகியோரை எதிர்த்து டெல்லியில் போட்டியிடுகிறார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications