தோண்ட தோண்ட சடலம்.. மணிப்பூர் மண்சரிவில் பலி எண்ணிக்கை 80 ஆக உயர்வு.. 50 பேர் கதி என்ன?
மணிப்பூர் நிலச்சரிவில் 20 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 50 பேர் மாயமாகி உள்ளனர்
இம்பால்: மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது... இதில் 15 பேர் ராணுவ வீரர்கள் ஆவர்.. ஆனால், 20 பேர் சடலங்கள் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.. மேலும் 50-க்கும் மேற்பட்டோர் மாயமாகிய உள்ள நிலையில், அவர்களை தேடும் பணியும் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டம் துபுல் ரயில் நிலையம் அருகே, இந்திய ராணுவ 107 டெரிடோரியல் ஆர்மியின் முகாம் செயல்பட்டு வருகிறது.
இங்கு நேற்று முன்தினம் இரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது... மணிப்பூரில் ஜிரிபாமில் இருந்து இம்பால் வரை ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

திடீர் மண்சரிவு
இந்நிலையில், பாதுகாப்பிற்காக மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் உள்ள துபுல் ரயில் நிலையம் அருகே இந்திய ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. அப்போதுதான், இந்த திடீர் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.. மண்ணோடு மண்ணாக 50 க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போய்விட்டனர்.. பலர் உயிருடன் புதைந்து போனார்கள்.. இதனையடுத்து மீட்பு பணிகள் ஆரம்பமாயின..

படுகாயம்
காயமடைந்த வீரர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, நோனி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்... மேலும் படுகாயமடைந்தவர்களை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.. குழந்தைகள் ஆற்றின் அருகே செல்லாமல் பார்த்து கொள்ளவும், பொதுமக்களை பாதுகாப்பாக இருக்கும்படியும், நோனி துணை ஆணையர் அறிவுறுத்தி உள்ளார்.

மண்சரிவு
இந்த திடீர் மண்சரிவு குறித்து, மணிப்பூர் முதல்வர் தன்னுடைய வருத்தத்தை தெரிவித்துள்ளார்.. மண்சரிவு நிலைமையை மதிப்பிடுவதற்காகவும் நேற்றைய தினம் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.. தேடுதல் மற்றும் மீட்பு பணி ஏற்கனவே நடந்து வருகிறது. அவர்களை இன்று நமது பிரார்த்தனையில் வைப்போம். அறுவை சிகிச்சைக்கு உதவ டாக்டர்களும் ஆம்புலன்ஸ்களும் அனுப்பப்பட்டுள்ளன' என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அமித்ஷா
முன்னதாக, மணிப்பூர் முதல்வருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் பேசி, நிலவரம் குறித்து விசாரித்தார்.. பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில், மணிப்பூரில் உள்ள துபுல் ரயில் நிலையம் அருகே நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் மற்றும் மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்னாவிடம் பேசினேன். மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ராணுவ குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது..மேலும் இரண்டு குழுக்கள் செல்கின்றன என்று அமித்ஷா பதிவிட்டிருந்தார்.

ஹெலிகாப்டர்
மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. இதில் 15 பேர் ராணுவ வீரர்கள். ஆனால் 20 பேரின் சடலங்கள் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.. மேலும் 50-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். அவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது... ஆனால், புதிய நிலச்சரிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது... வானிலை சீராகும் வரை ராணுவ ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிந்துள்ளது.. மீட்பு பணியில் தொடர் தாமதம் ஏற்பட்டு வருவதால், பதற்றமும் அங்கு அதிகரித்துள்ளது.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications