பறக்கும் விமானத்தின் வெளியே நின்றபடி சாகஸங்கள்.. பெங்களூர் விமான கண்காட்சியில்
பெங்களூர்: பெங்களூரில் நடந்து வரும் 10வது சர்வதேச விமானக் கண்காட்சியில் நடத்திக் காட்டப்படும் விமான சாகஸங்களில் இந்தமுறை பார்வையாளர்களை மிக அதிகமாக கவர்ந்து வருவது இங்கிலாந்தின் Breitling Wingwalkers தான்.
இந்த ஆண்டில் தான் இந்த அணி முதன்முறையாக பெங்களூர் விமானக் கண்காட்சியில் நுழைந்துள்ளது.

Boeing Stearman biplanes எனப்படும் இரட்டை அடுக்கு இறக்கைகள் கொண்ட விமானங்களில் ஏறி நிற்கின்றனர் பெண் சாகஸ வீரர்கள். இறக்கையோடு கட்டப்பட்ட நிலையில் இந்த இரு விமானங்கள் டேக்- ஆப் ஆகின்றன. இதன் பின்னர் நடப்பது எல்லாம் நம்மை அசர வைக்கும் வினாடிகள் தான்.
விமானங்கள் 200 கி.மீ. வேகத்தில் பறந்து கொண்டே இருக்க இந்த இரு பெண்களும் இறக்கைகளின் நடுவில் நின்றபடி ஏரோபேட்டிக்ஸில் ஈடுபடுகின்றனர். விமானங்கள் தலைகீழாகவும் வானில் பல்டி அடித்துக் கொண்டு பறக்க, இந்த இரு பெண்களும் பலவிதமான அசர வைக்கும் போஸ்களைத் தருகின்றனர்.

இந்த நிறுவனம் கடந்த 27 ஆண்டுகளாக உலகெங்கும் 2,500க்கும் மேற்பட்ட விமான சாகஸங்களை நடத்தியுள்ளதாம்.
பறந்து கொண்டிருக்கும் விமானத்துக்கு வெளியே வந்து சாகஸம் செய்வது என்பது 1918ம் ஆண்டில் தொடங்கியது. முதலாம் உலகப் போரில் அமெரிக்க விமானப் படையைச் சேர்ந்த ஓர்மெர் லாக்லியர் என்ற விமானியின் விமானத்தில் பிரச்சனை ஏற்பட்டுவிட, அவர் விமானத்துக்கு வெளியே வந்து பிரச்சனையை சரி செய்துவிட்டு, மீண்டும் தனது காக்பிட்டுக்குள் போய், விமானத்தை தொடர்ந்து இயக்கினார்.

இதையடுத்தே பறக்கும் விமானத்துக்கு வெளியே சாகஸம் செய்வது தொடங்கியது. போர் முடிந்து விமானப் படையில் இருந்து ரிடையர் ஆன லாக்லியர் இந்த சாகஸம் செய்யத் தயாராக இருந்த சிலரோடு இணைந்து ஒரு குழுவை உருவாக்கினார். பின்னர் பறக்கும்போதே ஒரு விமானத்தில் இருந்து அடுத்த விமானத்துக்கு தாவுவது, இறக்கையின் இரு முனைகளிலும் இரு வீரர்கள் நின்று கொண்டு டென்னிஸ் ஆடுவது போன்ற விஷயங்களையும் அறிமுகப்படுத்தினார்.
அந்த வகையில் பின்னர் எதெல் டேர் என்ற பெண் விமானியும் இந்தக் குழுவினரோடு இணைந்து ஏராளமான சாகஸங்களைச் செய்தார்.

அந்த வரிசையில் தான் இப்போதைய பிரைட்லிங் விங்வாக்கர்ஸ் குழுவினரும் தங்களது சாகஸ பயணங்களைத் தொடர்ந்து கொண்டுள்ளனர்.
ரெட் புல் அணியின் தலைமை விமானியும் பெண் தான்:
அதே போல பெங்களூர் விமானக் கண்காட்சியில் பார்வையாளர்களை அசத்தி வரும் ரெட்புல்ஸ் விமானங்களின் தலைமை விமானியும் பெண் தான்.

செக் நாட்டைச் சேர்ந்த ராட்கா மகோவா என்ற பெண் தான் இந்த அணியின் தலைவர். இரு குழந்தைகளுக்கு தாயான இவர் உலகம் முழுவதும் ரெட் புல் அணிக்காக சாகஸங்களை நிகழ்த்தியுள்ளார்.
நேற்று இந்த விமானங்கள் சாகஸங்கள் செய்து கொண்டிருந்தபோது வானில் மோதிக் கொண்டன. இதில் ராட்காவின் விமானத்தின் இறக்கை உடைந்து போனது. ஆனாலும், எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார் ராட்கா.
-
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி












Click it and Unblock the Notifications