வெங்கய்யா விலகல் எதிரொலி- ஸ்மிருதிக்கு தகவல் ஒலிபரப்புத்துறை கூடுதல் பொறுப்பு
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு தகவல் ஒலிபரப்புத்துறை கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூடுதலாக தகவல் ஒலிபரப்புத்துறையை கவனிப்பார் என்று மோடி அறிவித்துள்ளார்.
துணை குடியரசு தலைவர் வேட்பாளராக வெங்கய்யா நாயுடு அறிவிக்கப்பட்டுள்ளார். இதை அடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் வகித்து வந்த தகவல் ஒலிபரப்புத்துறை, அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற மேம்பாட்டுத்துறையை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஸ்மிருதி இரானி இப்போது மத்திய ஜவுளித்துறை அமைச்சராக உள்ளார். அவருக்கு கூடுதலாக தகவல் ஒலிபரப்புத்துறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications