Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Joshimath sinking:ஜோஷிமத் நகரம் திடீரென புதைய என்ன காரணம்? 1976-ம் ஆண்டே எச்சரித்த மிஸ்ரா கமிஷன்

Subscribe to Oneindia Tamil

டேராடூன்: உத்தரகாண்டில் உள்ள ஜோஷிமத் நகரம் கொஞ்சம் கொஞ்சமாக பூமியில் புதைந்துக் கொண்டிருக்கும் நிலையில், 1976-ம் ஆண்டே இதுகுறித்து ஒரு கமிஷன் எச்சரிக்கை விடுத்திருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இன்று நடக்கும் அனைத்தையும் கிட்டத்தட்ட 47 ஆண்டுகளுக்கு முன்பே அந்த கமிஷன் ரிப்போர்ட் புட்டு புட்டு வைத்துள்ளது. ஆனால், அரசாங்கங்கள் இதை அலட்சியப்படுத்தியதன் விளைவே தற்போது ஜோஷிமத் அழிவுக்கு காரணம் என புவியியல் விஞ்ஞானிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஒரு நகரத்தின் அழிவை பல ஆண்டுகளுக்கு முன்பே கணித்த ஓர் அறிக்கையை அரசாங்கங்கள் இந்த அளவுக்கு அலட்சியம் செய்ய என்ன காரணம் என்பது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியறுத்துகின்றனர்.

 புதையும் ஜோஷிமத் நகரம்

புதையும் ஜோஷிமத் நகரம்

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள மலையோர நகரமான ஜோஷிமத் இன்று சிறிது சிறிதாக பூமிக்குள் புதைந்து வருகிறது. சுமார் 15 ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் வசித்து வரும் ஜோஷிமத் நகரம் மோசமான புவியியல் அமைப்பை கொண்டிருக்கிறது. எனவே இங்கு அடிக்கடி நிலச்சரிவுகளும், நிலநடுக்கங்களும் ஏற்படுவது சஜகம். இந்நிலையில்தான், யாரும் எதிர்பாராத வகையில் கடந்த சில நாட்களாக ஜோஷிமத் பகுதியில் அடுத்தடுத்து பெரிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் அங்குள்ள பல வீடுகள் மண்ணில் புதைந்து வருகின்றன.

 1976-ம் ஆண்டே எச்சரித்த மிஸ்ரா கமிஷன்

1976-ம் ஆண்டே எச்சரித்த மிஸ்ரா கமிஷன்

தற்போது ஜோஷிமத்தில் நூற்றுக்கணக்கான வீடுகளும், சாலைகளும் புதைந்துள்ளன. இதனால் மரண பயத்தில் இருக்கும் ஜோஷிமத் மக்களை மீட்கும் பணியில் உத்தராகண்ட் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க, 1976-ம் ஆண்டிலேயே ஜோஷிமத் நகரம் எதிர்காலத்தில் சந்திக்கும் பிரச்சினைகளை புட்டு புட்டு வைத்த மிஸ்ரா கமிஷன் அறிக்கை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த அறிக்கையில், ஜோஷிமத் நகரில் வளர்ச்சிப் பணிகள் எந்த அளவுக்கு நடைபெற வேண்டும்; என்னென்ன திட்டங்களை செயல்படுத்தக் கூடாது; எந்த இடங்களில் வீடுகளை அனுமதிக்கக் கூடாது என்பன போன்ற எச்சரிக்கைகளை அந்த கமிஷன் தெரிவித்திருக்கிறது.

 என்னென்ன அறிவறுத்தல்கள்?

என்னென்ன அறிவறுத்தல்கள்?

மிஸ்ரா கமிஷன் அறிக்கையில், உத்தராகண்ட் மாநிலமே நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் மண்டலத்தில் அமைந்திருக்கும் போது, ஜோஷிமத் நகரம் அந்த அபாயத்தின் மையத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது. மலையின் சரிவின் நடுப்பகுதியில் ஜோஷிமத் நகரம் அமைந்திருப்பதால் இங்கு அடுக்குமாடி வீடுகள் கட்டப்படக் கூடாது என்றும், மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, நகரை சுற்றி 3-க்கும் மேற்பட்ட ஆறுகள் ஓடுவதால் மண் அரிப்பு இயற்கையிலேயே அதிகம் இருக்கும் எனத் தெரிவித்துள்ள மிஸ்ரா கமிஷன், வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் மண்ணை தோண்டும் வகையிலான எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

 அலட்சியப்படுத்திய அரசுகள்

அலட்சியப்படுத்திய அரசுகள்

ஆனால், மிஸ்ரா கமிஷனின் அறிக்கையை அப்போதைய மத்திய அரசும், உத்தரபிரதேச அரசும் (உபியின் ஒருபகுதியாக இருந்தது உத்தராகண்ட்) கிடப்பில் போட்டது. அதற்கு பிறகு அமைந்த அடுத்தடுத்த அரசுகளும் இதை சட்டை செய்யவில்லை. மாறாக, அந்த அறிக்கையில் என்னென்ன செய்யக் கூடாது என தெரிவிக்கப்பட்டதோ அவை அனைத்தும் ஜோஷிமத் நகரில் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சரிவாக இடத்தில் அதிக அளவிலான அடுக்குமாடி வீடுகளை கட்ட அனுமதித்ததால் நிலத்தில் இருக்கும் மணல்கள் வலுவிழக்க தொடங்கின. பல நீர்மின் திட்டங்களை செயல்படுத்தியதால் மண் அரிப்பு அதிகமானது. மேலும், பூமிக்கு அடியில் இருக்கும் பாறைகளில் நீர்ப்பிடிப்பு சக்தியும் குறைந்தது. அதுமட்டுமல்லாமல், முறையாக பாதாள சாக்கடை திட்டங்களை செயல்படுத்தததால் நிலத்திற்கு மேலே நீர் கசியும் பிரச்சினையும் உருவானது. இதுபோன்ற பல காரணங்களால், 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே, ஜோஷிமத்த்தை தாங்கும் நிலம் வலுவிலக்க தொடங்கி சிறிது சிறிதாக பூமிக்குள் புதைந்து போக ஆரம்பித்துள்ளன என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+