நண்பர்களுக்கு தேவையானதை 10 மாதங்களுக்கு முன்பே செய்து விட்டார் மோடி: மாயாவதி சாடல்
ரூபாய் நோட்டு விவகாரத்தில் பிரதமர் மோடி தனது நண்பர்களுக்குத் தேவையான உதவிகளை 10 மாதங்ளுக்கு முன்பே செய்து விட்டதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார். மோடியின் செல்லாது ரூபாய் ந
லக்னோ: கறுப்புப் பணத்தை ஒழிப்பதாக கூறி பிரதமர் மோடி தனது நண்பர்களுக்குத் தேவையான உதவியை 10 மாதங்களுக்கு முன்பே செய்து விட்டதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். மோடியின் அறிவிப்பபால் நடுத்தர மக்கள் தான் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8ஆம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என அறிவித்தார். மோடியின் இந்த திடீர் அறிவிப்பால் நாடு முழுவதும் பெறும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி ரூபாய் நோட்டு ஒழிப்பு திட்டத்தை இக்கட்டான நேரத்தில் எந்த முன்னேற்பாடும் இல்லாமல் கையில் எடுத்துள்ளார் என்று கூறினார். இதனால் மக்கள் பெரும் துன்பத்தை சந்தித்து வருவதாக கூறிய அவர், மருத்துவ செலவுக்கு கூட பணம் கொடுக்க முடியாமல் மக்கள் செத்து மடிவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
பணம் இல்லாததால் ஏழைகள் பலர் தங்கள் வீட்டு திருமணங்களை ரத்து செய்துள்ளனர். மாணவர்களால் உரிய நேரத்தில் கல்வி கட்டணத்தை செலுத்த முடியவில்லை என்றும் மாயாவதி கூறினார்.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என நாட்டு மக்களுக்கு திடீரென அறிவித்த மோடி, அதனை 10 மாதங்களுக்கு முன்பே தனது நண்பர்களுக்கு கூறி தேவையான உதவிகளை செய்துவிட்டதாகவும் மாயாவதி சாடியுள்ளார். இதன்மூலம் நாட்டில் உள்ள 90 சதவீத மக்களை மோடி பிச்சைக்காரராக்கி விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications