தொழில் நுட்பத்தை சொல்லுங்க... இந்தியா கொடுத்த நெருக்கடியால் மான்சாண்டோ நாட்டை விட்டு ஓட்டம்
டெல்லி: மத்திய அரசுக்கும், மான்சாண்டோ நிறுவனத்திற்கும் மரபணு விதை தொடர்பான தொழில் நுட்பம் குறித்து கருத்து முரண்பாடு ஏற்பட்டதால் அடுத்த தலைமுறை மரபணு பருத்தி விதைக்கு அனுமதி கோரும் விண்ணப்பத்தை மான்சாண்டோ நிறுவனம் திரும்பப் பெற்றது.
இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகளை மான்சாண்டோ நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்து வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து, போல்கார்ட் 2 ரவுண்ட் அப் என்று சொல்லக் கூடிய அடுத்த தலைமுறை மரபணு பருத்தி விதையை இந்தியாவில் அறிமுகம் செய்ய அனுமதி கோரும் விண்ணப்பத்தை 2007ம் ஆண்டு இந்திய அரசிடம் அளித்திருந்தது. இது தொடர்பான பல்வேறு சோதனைகள் முடிவடைந்து அனுமதி கிடைப்பதற்கான சூழல் உருவாகி இருந்தது.

இந்நிலையில், மான்சாண்டோ நிறுவனத்தின் இந்தியாவின் தொழில் நுட்ப கூட்டாளியான மாஹிகோ நிறுவனம் அனுப்பியுள்ள கடிதத்தில், மான்சாண்டோ நிறுவனத்தின் தொழில் நுட்பத்தை இந்திய உள்நாட்டு விதை நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று இந்திய அரசு கட்டாயப்படுத்தியுள்ளது. இதற்கு மான்சாண்டோ நிறுவனம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பருத்தி விதைகளுக்கான விலை நிர்ணய விவகாரத்திலும் மத்திய அரசுக்கும் மான்சாண்டோவுக்கும் முரண்பாடுகள் ஏற்கனவே இருந்தது என்று கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மான்சாண்டோ அடுத்த தலைமுறை பருத்தி விதைக்கான அனுமதி கோரும் தனது விண்ணப்பத்தை திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து, மான்சாண்டோவின் செய்தித் தொடர்பாளர், வர்த்தகம் மற்றும் கட்டுப்பாட்டு நிலவரங்களில் இருந்து வரும் நிச்சயமின்மை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் ஏற்கனவே இருக்கும் பருத்தி விதை வர்த்தகத்தில் எந்தவித பாதிப்பும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
எனினும், சரியான நேரத்தில் மீண்டும் அடுத்த தலைமுறை பருத்தி விதைக்கான அனுமதி கோரும் விண்ணப்பம் இந்திய அரசிடம் அளிக்கப்படும் என்று மாஹிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம்












Click it and Unblock the Notifications