மீடியாக்களுடன் உறவை வளர்க்க முயற்சி செய்வேன்: 'டீ பார்ட்டியில்' மோடி உறுதி
டெல்லி: ஊடகங்களுடன் நல்ல உறவை மேம்படுத்த முயற்சி செய்வதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.
ஊடகங்களிடமிருந்து விலகியே இருப்பவர் பிரதமர் நரேந்திர மோடி. அவர் விரும்பும் நேர்த்தில் மட்டும், ஊடகங்களில் பேசி வருகிறார். பிரதமராகிய உடனேயோ, மாநிலங்களின் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானபோதோ கூட மீடியாக்களை சந்திக்காத மோடி, இன்று முதன்முறையாக மீடியாக்களுடன் சந்திப்பு நடத்தினார்.

தீபாவளி பண்டிகையை ஒட்டி, செய்தியாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று டீ விருந்து அளித்தார். "தீபாவளி மிலன்" என்றழைக்கப்படும் இந்த விருந்தில் கலந்து கொள்ள 400க்கும் மேற்பட்ட செய்தியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் எடிட்டர்களும் அடங்குவர்.
காலை 11 மணிக்கு பாஜக தலைமை அலுவலகத்தில் தொடங்கிய விருந்து, மதியம் 1 மணிவரை நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் பா.ஜக தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மீடியா பிரதிநிதிகள் மத்தியில் பேசிய மோடி, "நானும் ஒரு காலத்தில், மீடியா பிரதிநிதிகளுக்காக இருக்கைகளை போட்டு காத்திருந்து பேட்டியளித்துள்ளேன். மீடியாக்களுடன் நல்ல உறவை வைத்திருந்தேன். ஆனால் மீடியாக்களுடன் கலந்து பேச முடியாத சூழ்நிலையும் உருவானது. இருப்பினும் மீடியாக்களுடனா உறவை மேம்படுத்துவது எப்படி என்பது குறித்து ஆலோசித்து வருகிறேன்.
கடந்த ஒரு மாதமாகவே தூய்மை இந்தியா திட்டம் குறித்து பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருவதை பார்க்கிறேன். சமூக வலைத்தளங்களிலும் ஸ்வச்பாரத் திட்டம் குறித்து அதிக சர்ச்சை நடந்து வருகிறது. இந்தியாவை சுத்தப்படுத்த தனி நபர்கள் எப்படி பங்களிக்க வேண்டும் என்பதை மீடியாக்கள் கற்றுத்தருவது மகிழ்ச்சியை அளிக்கிறது.
இதற்காக மீடியாக்களுக்கு அரசு சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். சுத்தம், சுகாதாரம் குறித்து இதுவரை எழுதாத பல மீடியா எழுத்தாளர்கள், இப்போது தங்கள் பேனாக்களை, துடைப்பமாக மாற்றி அதுகுறித்து எழுதி வருவது மகிழ்ச்சியளிக்கிறது.
மீடியாக்கள் அளிக்கும் விழிப்புணர்வு காரணமாக, பட்டாசு வெடித்த பிறகு அதனால் சேரும் குப்பைகளை மக்களே அகற்றிவருவதாக தகவல் கிடைத்துள்ளது. இவ்வாறு மோடி பேசினார்.
குஜராத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக அனைத்து மீடியாக்களும் நரேந்திரமோடியை கடுமையாக விமர்சனம் செய்தன. மோடி மீது தனிமனித தாக்குதலில் மீடியாக்கள் இறங்கின. குறிப்பாக ஆங்கில ஊடகங்கள் இதுபோல செய்தனர்.
அப்போதிருந்தே, மீடியாக்களை ஒதுக்கி வைத்தார் மோடி. அப்படியிருந்தும், குஜராத்தில் மீண்டும் முதல்வராக தேர்வானார். இதனால் மீடியாக்களை ஒதுக்கி வைத்த தனது முடிவை அவர் மறுபரிசீலனை செய்யவில்லை. முழுக்க சமூக வலைத்தளங்களில் மட்டுமே மோடி கவனம் செலுத்த தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி












Click it and Unblock the Notifications