ஹரியானா மாநில முதல்வராக 2வது முறையாக நயாப் சிங் சைனி பதவியேற்றார்.. மோடி, அமித்ஷா பங்கேற்றனர்
சண்டிகர்: ஹரியானா மாநில முதல்வராக 2வது முறையாக நயாப் சிங் சைனி இன்று பதவியேற்று கொண்டார். இதன் மூலம் ஹரியானாவில் தொடர்ந்து 3வது முறையாக பாஜக அரசு அமைந்துள்ளது. பிரதமர் மோடி, ஜெபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.
ஹரியானா மாநிலத்தில் கடந்த 5 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. பாஜக, காங்கிரஸ், மாநில கட்சியான ஜேஜேபி, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. இதில் பெரும்பான்மைக்கு அதிகமாகவே பாஜக மட்டும் 48 இடங்களில் வெற்றி பெற்றது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் எல்லாம் காங்கிரஸ் தான் வெற்றி பெறும் என்று கூறப்பட்ட நிலையில், பாஜக 3 வது முறையாக ஹரியானாவில் வெற்றி பெற்றது. தற்போது ஹரியானாவின் முதல்வராக உள்ள நயாப் சிங் சைனியே மீண்டும் அம்மாநில சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புதிய அரசு அமைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்ட நிலையில், நேற்று பஞ்ச்குலாவில் புதிதாக வெற்றி பெற்ற பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம் நடந்தது. மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா தலைமையில் இந்த கூட்டம் நடந்தது. இதில், தற்போதைய முதல்வராக உள்ள நயாப் சிங் சைனி மீண்டும் சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து கவர்னர் மாளிகைக்கு சென்ற நையாப் சைனி சிங் ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவை சந்தித்து ஆட்சியமைக்கு உரிமை கோரியுள்ளார். ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் தான் ஹரியானா மாநிலத்தின் முதல்வராக மீண்டும் நயாப் சிங் சைனி இன்று பதவியேற்றார். இவருடன் புதிய அமைச்சர்களும் பதவியேற்றனர்.
ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா நயாப் சிங் சைனிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜேபி நட்டா மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். ஹரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் உள்ளது. 90 தொகுதிகளை கொண்ட ஹரியானாவில் கடந்த 2014-ம் ஆண்டில் 47 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது.
ஆனால், கடந்த 2019 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவால் , 40 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. பெரும்பான்மைக்கு தேவையான ஒரு சீட் இல்லாததால், 10 தொகுதிகளை வென்ற மாநிலக் கட்சியான ஜேஜேபி-ன் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியமைத்தது பாஜக. இதையடுத்து நயாப் சிங் சைனி முதல்வரானார். இதையடுத்து தற்போது நடந்த தேர்தலிலும் 48 தொகுதிகளில் வெற்றி பெற்று ஹரியானாவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக நயாப் சிங் சைனி முதல்வராக பதவியேற்றுள்ளார். தொடர்ந்து 3 வது முறையாக ஹரியானாவில் பாஜக ஆட்சி அமைந்துள்ளது.
-
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications