"இதையேதானே அந்த டெய்லரும் சொன்னான்": சுவிஸ் வங்கி பட்டியலில் இந்தியர்களின் பெயர் இல்லை.. ஜேட்லி
டெல்லி: சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கி வைத்துள்ள இந்தியர்களி்ன் பட்டியல் தங்களிடம் இல்லை என்று மத்திய அரசுக்கு, சுவிட்சர்லாந்திலிருந்து தகவல் வந்துள்ளதாக ராஜ்யசபாவில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
இதேபோலத்தான் முன்பு காங்கிரஸ் அரசும் தொடர்ந்து கூறி வந்தது. ஆனால் அப்போது அதற்கு பாஜக ஆட்சேபனை தெரிவித்து வந்தது. தற்போது அதேபோன்ற பதிலை பாஜக நிதியமைச்சரும் கூறியுள்ளார்.
சுவிஸ் வங்கியில் பணம் போட்டு வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை சுவிட்சர்லாந்து அரசு தயாரிப்பதாக முன்பு தகவல்கள் வெளியாகின. தற்போது அந்தப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த யாருடைய பெயரும் இல்லை என்று அங்கிருந்து தகவல் வந்துள்ளதாம்.

ஆனா வெப்சைட்டில் இருக்கே
இதுகுறித்து ராஜ்யசபாவில் பேசிய அருண் ஜேட்லி, இருப்பினும், சுவிஸ் தேசிய வங்கியின் இணையதளத்தில், கடந்த 2013ம் ஆண்டு இறுதியில், சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் போட்டு வைத்துள்ள பணத்தின் அளவு கடந்த ஆண்டு இருந்த ரூ. 8547 கோடி என்பதிலிருந்து ரூ. 14,100 கோடியாக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

கடிதம் எழுதிக் கேட்டோம்
மேலும் ஜேட்லி கூறுகையில், ஜூன் 23ம் தேதி சுவிட்சர்லாந்துக்கு மத்திய அரசு கடிதம் எழுதி பட்டியலை அனுப்புமாறு கேட்டிருந்தது. அதற்கு வந்த பதிலில் பட்டியலில் இந்தியர்களின் பெயர்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்தியர்கள் யாருமே இல்லையாம்
மேலும் அவர் கூறுகையில், ஜூலை 4ம் தேதி மத்திய அரசுக்குப் பதில் வந்தது. அதில், இந்திய குடிமக்கள், அதாவது வரி கட்டும் குடிமக்கள் யாருடைய பெயரும் எங்களிடம் உள்ள பட்டியலில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கேட்டு வருகிறோம்
சுவிட்சர்லாந்து அரசுடன் 2011ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி மேற்கொள்ளப்பட்ட புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் தொடர்ந்து சுவிஸ் அரசிடம் கருப்புப் பணம் பதுக்கி வைத்திருப்போர் பட்டியலை அரசு கேட்டு வருகிறது.

சில கோரிக்கைகளுக்கு பலன் கிடைத்துள்ளது
அரசின் சில கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளது. ஆனால் சில கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை. தங்களது நாட்டுச் சட்டம் முழுமையான தகவல்களைத் தர மறுப்பதாக சுவிட்சர்லாந்து கூறுகிறது என்றார் ஜேட்லி.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications