இந்தியாவில் என்னைவிட தேசபக்தி மிகுந்தவன் யாரும் இருக்க முடியாது: ஷாருக்கான்
மும்பை: இந்தியாவில் தன்னை விட தேசபக்தி மிகுந்தவர் யாரும் இருக்க முடியாது என்று பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். நான் இந்த நாட்டை சேர்ந்தவன் தான், எனக்கு தேசபக்தி உள்ளது என்று என்னை சொல்ல வைத்ததை நினைத்தால் சில சமயம் அழ வேண்டும் போல் இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சகிப்புத்தன்மை இல்லாதது மிகப்பெரிய பிரச்சனை. அது கவலை அளிப்பதாக உள்ளது என்று பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கடந்த நவம்பர் மாதம் தெரிவித்தார். இதையடுத்து பல அரசியல் கட்சிகளும், சமூக வலைதளங்களில் மக்களும் ஷாருக்கானை கண்டித்து கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் அவர் தற்போது கூறியிருப்பதாவது,

அழுகை
நான் இந்த நாட்டை சேர்ந்தவன் தான், எனக்கு தேசபக்தி உள்ளது என்று என்னை சொல்ல வைத்ததை நினைத்தால் சில நேரம் எனக்கு கவலையாக இருக்கும், சில சமயம் அழ வேண்டும் போல் இருக்கும்.

இளைஞர்கள்
சகிப்புத்தன்மையோடு இருங்கள், சந்தோஷமாக இருங்கள், கடினமாக உழையுங்கள், அவ்வாறு செய்து நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்லுங்கள் என்று நான் இளைய தலைமுறையிடம் தெரிவிப்பேன்.

தேசபக்தி
நான் கடைசி முறையாக மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாட்டில் என்னை விட தேசபக்தி உள்ளவன் யாரும் கிடையாது. இந்த உலகின் மிகவும் பெருமைமிக்க இந்தியன் நான். மதம், ஜாதி, நிறம் உள்ளிட்டவற்றில் சகிப்புத்தன்மை இல்லாமல் நடந்து கொள்ளாதீர்கள் என்று தான் இளைய தலைமுறைக்கு அறிவுரை வழங்கியுள்ளேன்.

தந்தை
என் தந்தை தனது இளம் வயதில் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர். இந்த சிறந்த நாட்டில் இருந்து அனைத்தையும் பெற்ற நான் எப்படி நாட்டை பற்றி புகார் தெரிவிப்பேன். நான் ஒருபோதும் குறை கூற மாட்டேன்.

அழகான நாடு
உலகின் சிறந்த நாட்டில் வாழும் நாம் நல்லதையே நினைக்க வேண்டும். நாம் உலகின் மிகவும் அழகான, பாதுகாப்பான நாடுகளில் ஒன்றில் வசித்து வருகிறோம். அப்படி இருக்கையில் சிறு சிறு விஷயங்களில் முடங்கிவிடக் கூடாது.

குட்டி இந்தியா
என் குடும்பமே ஒரு குட்டி இந்தியா தான். என் மனைவி கௌரி ஒரு இந்து, நான் ஒரு முஸ்லீம், என் 3 குழந்தைகள் மூன்று மதங்களை பின்பற்றுகிறார்கள். அப்படி இருக்கையில் என் நாட்டை பற்றி நான் எப்படி குறைவாக நினைக்க முடியும்?

சம்பளம்
நான் விளம்பரங்களுக்கு, மேடை நிகழ்ச்சிகளுக்கு, நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே பணம் வாங்குகிறேன். என் படம் நன்கு ஓடினால் நீங்கள் கொடுப்பதை கொடுங்கள் என்று தான் தயாரிப்பாளர்களிடம் கூறுகிறேன். படத்தில் நடிப்பதை வியாபாரமாக வைத்துக்கொள்ளவில்லை.
-
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications