பஞ்சாப்பில் பயங்கரவாதிகள் தாக்குதல் - எஸ்.பி. உட்பட 8 பேர் பலி; 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொலை!!
குர்தாஸ்பூர்: பஞ்சாப் மாநிலத்தில் எல்லை தாண்டி ஊடுருவிய பயங்கரவாதிகள் இன்று கொடூர தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து தீவிரவாதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே 12 மணிநேரம் துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது. இம்மோதலில் காவல்துறை கண்காணிப்பாளர் உட்பட 8 பேர் பலியாகினர். தாக்குதலில் ஈடுபட்ட 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தினாநகர் காவல் நிலையம் மற்றும் பேருந்து ஒன்றின் மீது ராணுவ உடையில் இருந்த சில தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இன்று அதிகாலை 5 மணியளவில் இத்தாக்குதல் தொடங்கியது.

இந்த தாக்குதலால் குர்தாஸ்பூரில் பதற்றம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து உள்ளூர் போலீசார் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் இணைந்து தீவிரவாதிகள் பதுங்கிய கட்டிடத்தை சுற்றி வளைத்து தாக்குதலை நடத்தினர்.
இருதரப்பினரிடையே மாலை 5 மணிவரை சுமார் 12 மணிநேரம் துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது. இந்த மோதலில் குர்தாஸ்பூர் எஸ்.பி. உட்பட 8 பேர் பலியாகினர். மொத்தம் 5 போலீசாரும் 3 பொதுமக்களும் உயிரிழந்தனர்.
இத்தாக்குதலை நடத்திய 3 தீவிரவாதிகளும் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே ஜம்மு காஷ்மீர் எல்லையில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது.
இதனிடையே உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பஞ்சாப் முதல்வருடன் தொலைபேசியில் பேசி நிலைமை குறித்து விவரம் பெற்றார். மேலும் பஞ்சாபில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர உதவி செய்வதாகவும் அவர் வாக்குறுதி அளித்திருந்தார்.
இத்தாக்குதலால் குர்தாஸ்பூரில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் இன்று மூடப்பட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து எல்லைப் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications