சசிகலாவுக்கு அதிக ஆதரவு உள்ளதை ஓ.பி.எஸ் ஒப்புக்கொண்டார்.. சசி தரப்பு வக்கீல் பிடித்த பாயிண்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பன்னீர்செல்வம் கணக்குப்படி பார்த்தால்கூட சசிகலாவுக்கு அதிக ஆதரவு இருப்பது உறுதியாகிறது என்று வழக்கறிஞர் அரிமா சுந்தரம் குறிப்பிட்டார்.

தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி முன்னிலையில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த வாத-விவாதங்கள் நடந்து வருகின்றது.

முதலில் ஓ.பி.எஸ் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, அதிமுக உறுப்பினர்கள் அதிகம்பேரின் ஆதரவு ஓ.பி.எஸ் அணிக்கு இருப்பதாக வாதம் முன்வைக்கப்பட்டது.

பிரமாண பத்திரம்

பிரமாண பத்திரம்

அப்போது அவர்கள் கூறுகையில், ஓபிஎஸ் அணியின் சார்பில் 5706 பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பத்திரங்கள் அடிப்படையில் பார்த்தால், 43,63,328 லட்சம் அதிமுக உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர் என வாதிட்டனர்.

அதே பாயிண்ட்

அதே பாயிண்ட்

இதன்பிறகு சசிகலா அணிக்கு வாதிட வய்ப்பு கொடுக்கப்பட்டது. அப்போது வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதம் முன்வைத்தார். ஓ.பி.எஸ் அணி கூறிய புள்ளி விவரத்தையே அவருக்கு எதிராக திருப்பினார் அரிமா சுந்தரம்.

குளறுபடி

குளறுபடி

ஓ.பி.எஸ் தரப்பில் கொடுக்கப்பட்ட ஆவணங்களில் குழறுபடி இருப்பதாக அரிமா சுந்தரம் குறிப்பிட்டார். ஜோடிக்கப்பட்ட ஆவணங்கள் என்று கூறியதோடு, அப்படியே அவர் கூறியது உண்மையாக இருந்தாலும் கூட சசிகலாவுக்குதான் பெரும்பான்மை இருப்பதாக ஓ.பி.எஸ் தரப்பு ஒப்புக்கொண்டதாக அரிமா சுந்தரம் கூறினார்.

சசிகலாவுக்கு அதிக தொண்டர்கள்

சசிகலாவுக்கு அதிக தொண்டர்கள்

அதாவது, ஓபிஎஸ் அணி 43,63,328 பேர் ஆதரவு இருப்பதாக கூறுகிறது. ஆனால், அதிமுகவின் தொண்டர்கள் ஒன்றரை கோடிபேர் உள்ளனர். அப்படிப்பார்த்தால் சசி அணிக்கே அதிக ஆதரவு என்று அரிமா சுந்தரம் வாதம் முன்வைத்தார். இதனால் ஓ.பி.எஸ் தரப்பு அதிர்ந்துபோனது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+