ப.சிதம்பரம் விரைவில் கைதாவது நிச்சயம்.. சொல்கிறார் சுப்பிரமணிய சாமி உறுதி
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விரைவில் கைதாவார் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார்.
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விரைவில் கைதாவார் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அன்னிய முதலீடு பெற உதவிய குற்றச்சாட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கார்த்தி சிதம்பரத்தை வரும் 24ம் தேதி வரை டெல்லி திஹார் சிறையில் அடைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில், கார்த்தியை கைது செய்துள்ள சி.பி.ஐ., பல நாட்கள் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தியது.

ஜாமீன் மனு நிராகரிப்பு
இன்று அவரை டெல்லி பாட்டியாலாவில் உள்ள சி.பி.ஐ., நீதிமன்றத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். கார்த்தியின் ஜாமின் மனுவை உடனடியாக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.

சிதம்பரத்திற்கு திஹார் சிறை
அவரை 12 நாட்களுக்கு அதாவது வரும் 24ம் தேதி வரை நீதிமன்ற காவலில் திஹார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணிய சாமி செய்தியாளர்களிடம் பேசினார்.

விரைவில் கைதாவார்
அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் விரைவில் கைது செய்யப்படுவார் என அவர் கூறினார். பிரதமர் தலையீட்டால் அமலாக்கத்துறையும் சிபிஐயும் சுதந்திரமாக செயல்படுகிறது என்றும் அவர் கூறினார்.

தெரிந்தே தவறு செய்தார்
ஏர்செல் விவகாரத்தில் சிதம்பரம் தெரிந்தே தவறு செய்துள்ளார் என்றும் அதன் மூலம் கார்த்தி சிதம்பரத்திற்கு பணம் கிடைத்தது என்றும் சுப்பிரமணிய சாமி தெரிவித்தார். சிதம்பரத்தின் மீது ஒரு மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

டிவிட்டரிலும் கருத்து
இதனால் ப.சிதம்பரம் கைதாவது நிச்சயம் என்றும் அவர் கூறினார். இதேகருத்தை சுப்பிரமணிய சாமி தனது டிவிட்டர் பக்கத்திலும் தெரிவித்துள்ளார்.
|
சிறைக்கு செல்வது உறுதி
அதாவது ப.சிதம்பரம் சிறைக்கு செல்வது நிச்சயம், அனைத்து தேசிய எதிர்ப்பு இயக்கங்களும் மற்றும் கண்கவர் டிவி அறிவிப்பாளர்களும் அணி திரட்டி ப.சிதம்பரத்தை காப்பாற்ற முயற்சிப்பதாகவும் சுப்பிரமணியசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications