திருப்பதியைப் போல சபரிமலை கோவிலை தினமும் திறக்க வேண்டும்: பினராயி கருத்துக்கு கடும் எதிர்ப்பு
திருவனந்தபுரம்: ஆந்திராவின் திருப்பதியைப் போல கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோவிலையும் தினமும் திறக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ள கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா தொடங்க இன்னும் 2 மாதங்கள் உள்ளன. சபரிமலையில் பக்தர்களுக்கு செய்யப்பட வேண்டிய வசதிகள் மற்றும் ஏற்பாடுகள் குறித்து முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதனை முதல்வர் பினராயி விஜயன் சபரிமலை சன்னிதான கூட்ட அரங்கில் நடத்த ஏற்பாடு செய்தார். இதற்காக நேற்று காலை அவர் திருவனந்தபுரத்தில் இருந்து பம்பைக்கு சென்றார்.

இருமுடி கட்டி...
அங்கு இருமுடி கட்டி சன்னிதானம் செல்ல திட்டமிட்டார். கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சியில் முதல்வராக இருந்த யாரும் இதுவரை இருமுடி கட்டி சன்னிதானம் சென்றதில்லை.

பம்பையில் மழை
அந்த பழக்கத்தை பினராயி விஜயன் மாற்ற முன் வந்தார். ஆனால் நேற்று அவர் பம்பை சென்றடைந்ததும் பலத்த மழை கொட்டியது. இதனால் அவர் திட்டமிட்டப்படி சன்னிதானம் செல்ல முடியவில்லை.

ஆலோசனை கூட்டம்
மழை காரணமாக பம்பையில் உள்ள கணபதி கோவிலில் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இதில் அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

திருப்பதி போல...
இக்கூட்டத்தில், பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த திருப்பதி கோவிலை போல இங்கும் வி.ஐ.பி. தரிசனத்திற்கு கட்டணம் வசூலிக்க வேண்டும். கோவில் நடையை தினமும் திறக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

கடும் எதிர்ப்பு
ஆனால் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், சபரிமலை ஐயப்பன் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் பார்க்காதவர். அவரை தரிசிக்க வி.ஐ.பி. வரிசையும், அதற்காக கட்டணமும் வசூலிக்க முடியாது. ஐயப்பன் பிரம்மச்சாரி விரதம் கடை பிடிப்பவர். மாதந்தோறும் தியானத்தில் இருப்பவர். அவரது கோவிலை தினசரி திறப்பது என்பது ஆகம விதிக்கு முரணானது. எனவே கோவில் நடையை தினமும் திறப்பதை ஒப்புக்கொள்ள முடியாது என்றார். இதனைத் தொடர்ந்து பிரயார் கோபாலகிருஷ்ணனின் கருத்தை ஏற்பதாகவும், தன்னுடைய கருத்தை பரிசீலிக்க வேண்டுமென்றும் பினராயி விஜயன் தெரிவித்தார். விரைவில் இருமுடி கட்டி மீண்டும் சபரிமலை சன்னிதானம் வருவேன் என்றும் கூறினார்.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications