பாரீஸ் பருவநிலை உச்சி மாநாடு.. பிரான்ஸ் புறப்பட்டார் மோடி
டெல்லி: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறும் பருவநிலை உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று பிரான்ஸ் புறப்பட்டார்.
COP 21 என்று அழைக்கப்படும் இம்மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன. பிரதமர் மோடி இம்மாநாட்டில் கலந்துகொண்டு உலகம் வெப்பமயமாதலை எதிர்கொள்வதில் இந்தியாவின் பங்கு என்பது குறித்து பேச உள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில்,
பாரிசில் நடைபெறும் COP 21 மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் செல்கிறேன். இம்மாநாட்டில் உலகம் வெப்பமயமாதலால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், கார்பன் பயன்பாட்டை குறைப்பதற்கு இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் பேச இருக்கிறேன்.
Leaving for Paris, where I will join @COP21. In the Summit, we will deliberate on crucial issues relating to environment & climate change.
— Narendra Modi (@narendramodi) November 29, 2015 சர்வதேச நாடுகளின் சூரியமின் சக்திக்கான கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில், பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் அதிபர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
அண்மையில், பாரிசில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டதையடுத்து, மாநாடு நடைபெறும் இதயத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதனையடுத்து, அமெரிக்க அதிபர் ஒபாமாவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள " புதுமையான முயற்சிகள்" எனும் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.
-
இந்திய கப்பல்களுக்கு அனுமதி? ஈரான் அதிபருக்கு போன் போட்ட மோடி! பிரச்சனை தீருமா! -
"கொரோனா டைம் போல.." ஒரு நொடி யோசித்து பிரதமர் சொன்ன வார்த்தை.. எல்பிஜி சிக்கல் அவ்வளவு மோசமா? -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications