விவசாயிகளை மறந்துவிட்டு ஜனநாயகம் பற்றி பேசுவதா?.. பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கண்டனம்
டெல்லி : ஜனநாயகம் பற்றி பேசும் பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகள், தொழிலாளர்களை முழுவதும் மறந்து விட்டதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
நிலம் கையகப்படுத்துதல் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு 3 முறை அவசரச் சட்டங்களை கொண்டு வந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக 4 ஆவது முறையாக அவசரச் சட்டம் கொண்டு வருவதை மத்திய அரசு கைவிட்டது.
இதையடுத்து, நிலம் கையகப்படுத்துதல் விவகாரத்தில் காங்கிரஸ் மேற்கொண்ட நடவடிக்கையினாலேயே அவசரச் சட்டத்தை மத்திய அரசு கைவிட்டுவிட்டதாக தெரிவித்து, டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் வெற்றி தின நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
நிலம் கையக மசோதா விவகாரத்தில் மத்திய அரசு பின்வாங்கிவிட்டதாகக் கூறி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீட்டு முன் நேற்று இளைஞர் காங்கிரஸார் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
தொடர்ந்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை விவசாயிகள் குழுவினர் சந்தித்துப் பேசினர். அப்போது அவர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசியதாவது...
ஜனநாயகம் குறித்து பிரதமர் மோடி பேசுகிறார். ஆனால், ஜனநாயகத்தை வழிநடத்தும் விவசாயிகள், தொழிலாளர்கள் குறித்து அவர் பேசுவதில்லை. அவர்களை மோடி மறந்துவிட்டார்.
நிலம் கையக அவசரச் சட்டத்தை மத்திய அரசு கைவிட்டுவிட்டது. இது காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வெற்றியாகும். இது விவசாயிகளுக்கும் வெற்றிதான் என்றார் ராகுல் காந்தி.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ராகுல் காந்தியின் தாயுமான சோனியா காந்தியும் கலந்து கொண்டார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications