விவசாயிகளை மறந்துவிட்டு ஜனநாயகம் பற்றி பேசுவதா?.. பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கண்டனம்
டெல்லி : ஜனநாயகம் பற்றி பேசும் பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகள், தொழிலாளர்களை முழுவதும் மறந்து விட்டதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
நிலம் கையகப்படுத்துதல் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு 3 முறை அவசரச் சட்டங்களை கொண்டு வந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக 4 ஆவது முறையாக அவசரச் சட்டம் கொண்டு வருவதை மத்திய அரசு கைவிட்டது.
இதையடுத்து, நிலம் கையகப்படுத்துதல் விவகாரத்தில் காங்கிரஸ் மேற்கொண்ட நடவடிக்கையினாலேயே அவசரச் சட்டத்தை மத்திய அரசு கைவிட்டுவிட்டதாக தெரிவித்து, டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் வெற்றி தின நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
நிலம் கையக மசோதா விவகாரத்தில் மத்திய அரசு பின்வாங்கிவிட்டதாகக் கூறி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீட்டு முன் நேற்று இளைஞர் காங்கிரஸார் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
தொடர்ந்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை விவசாயிகள் குழுவினர் சந்தித்துப் பேசினர். அப்போது அவர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசியதாவது...
ஜனநாயகம் குறித்து பிரதமர் மோடி பேசுகிறார். ஆனால், ஜனநாயகத்தை வழிநடத்தும் விவசாயிகள், தொழிலாளர்கள் குறித்து அவர் பேசுவதில்லை. அவர்களை மோடி மறந்துவிட்டார்.
நிலம் கையக அவசரச் சட்டத்தை மத்திய அரசு கைவிட்டுவிட்டது. இது காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வெற்றியாகும். இது விவசாயிகளுக்கும் வெற்றிதான் என்றார் ராகுல் காந்தி.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ராகுல் காந்தியின் தாயுமான சோனியா காந்தியும் கலந்து கொண்டார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications