ஓய்வுக்குப் பிறகு பிரணாப் முகர்ஜி எங்க தங்கப்போறாருன்னு தெரியுமா?
ஓய்வுக்குப் பிறகு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வாழ்ந்த வீட்டில் வசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி: ஓய்வுக்குப் பிறகு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வாழ்ந்த வீட்டில் வசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரணாப் முகர்ஜியின் ரசனைக்கேற்ப அந்த வீட்டை மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
டெல்லி ராஜாஜி மார்க்கில் உள்ள 10ஆம் எண் இல்லத்தை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் அவரது மறைவுக்குப் பிறகு அந்த வீடு அப்துல்கலாம் நினைவாக அறிவுசார் மையமாக மாற்றப்பட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

மக்களின் கோரிக்கைகளை உதாசினப்படுத்திய மத்திய அரசு அந்த வீட்டை கலாச்சாரத் துறை அமைச்சராக இருந்த மகேஷ் சர்மாவுக்கு ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வரும் ஜூலை மாதத்துடன் ஓய்வு பெற உள்ளார்.
ஓய்வுக்காலத்தில் பிரணாப் முகர்ஜி வசிக்க 10 ஆம் எண் வீட்டை மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது அந்த வீட்டில் வசித்து வரும் அமைச்சர் மகேஷ் சர்மா, அக்பர் சாலையில் உள்ள வேறு இல்லத்திற்கு மாற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பிரணாப் முகர்ஜியின் ரசனைக்கு ஏற்றது போல 10-ம் எண் வீட்டில் தேவையான மாற்றங்களை செய்ய இருப்பதாகவும் மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெறும் ஒருவர் இந்தியாவின் எந்த பகுதியிலும் வசிக்க முடியும். அவர்கள் தங்கும் இல்லத்திற்கான வாடகை, மின்சாரம் மற்றும் குடிநீர் ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications