ஓய்வுக்குப் பிறகு பிரணாப் முகர்ஜி எங்க தங்கப்போறாருன்னு தெரியுமா?
ஓய்வுக்குப் பிறகு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வாழ்ந்த வீட்டில் வசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி: ஓய்வுக்குப் பிறகு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வாழ்ந்த வீட்டில் வசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரணாப் முகர்ஜியின் ரசனைக்கேற்ப அந்த வீட்டை மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
டெல்லி ராஜாஜி மார்க்கில் உள்ள 10ஆம் எண் இல்லத்தை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் அவரது மறைவுக்குப் பிறகு அந்த வீடு அப்துல்கலாம் நினைவாக அறிவுசார் மையமாக மாற்றப்பட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

மக்களின் கோரிக்கைகளை உதாசினப்படுத்திய மத்திய அரசு அந்த வீட்டை கலாச்சாரத் துறை அமைச்சராக இருந்த மகேஷ் சர்மாவுக்கு ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வரும் ஜூலை மாதத்துடன் ஓய்வு பெற உள்ளார்.
ஓய்வுக்காலத்தில் பிரணாப் முகர்ஜி வசிக்க 10 ஆம் எண் வீட்டை மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது அந்த வீட்டில் வசித்து வரும் அமைச்சர் மகேஷ் சர்மா, அக்பர் சாலையில் உள்ள வேறு இல்லத்திற்கு மாற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பிரணாப் முகர்ஜியின் ரசனைக்கு ஏற்றது போல 10-ம் எண் வீட்டில் தேவையான மாற்றங்களை செய்ய இருப்பதாகவும் மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெறும் ஒருவர் இந்தியாவின் எந்த பகுதியிலும் வசிக்க முடியும். அவர்கள் தங்கும் இல்லத்திற்கான வாடகை, மின்சாரம் மற்றும் குடிநீர் ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications