கென்யா தாக்குதல்: பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு உதவுவதாக மோடிக்கு பிரதமர் பதில் கடிதம்
டெல்லி: கென்ய வணிக வளாகத் தாக்குதலில் பாதிக்கப் பட்ட இந்திய வம்சாவளியினருக்கு உதவி செய்யக் கோரி, குஜராத் முதலமைச்சர் மோடி எழுதிய கடிதத்திற்கு உடனடியாக பதில் எழுதியிருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்.
கென்யா தலைநகர் நைரோபி வணிகவளாகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போது, அங்கு குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. தாக்குதலில் சிக்கி 20 குஜராத் குழந்தைகளைக் காணவில்லை என அதிகரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.
இந்நிலையில், கென்யா தாக்குதலில் சிக்கி படுகாயம் அடைந்த இந்தியர்கள் மற்றும் இந்தியா வம்சா வழிகளின் பாதுகாப்புக்கு மத்திய அரசு தேவையான உதவிகளை அளிக்க வேண்டும் என குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, நரேந்திர மோடியின் கடிதத்துக்கு உடனடியாக பதில் கடிதம் அனுப்பியுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘கென்யாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சா வழியைச் சேர்ந்தவர்கள் பலியான சம்பவம் மிகுந்த துயரமானது ஆகும். அவர்களின் குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்திய அரசு செய்து உள்ளது. இந்தியர்களின் பாதுகாப்பு பற்றி கென்யா அதிபருக்கு நான் கடிதம் எழுதியும் உள்ளேன். நைரோபியில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறது' எனக் கூறியுள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications