ப்பா..! 100-வது நாளை எட்டியது ராகுலின் 'பாரத் ஜோடா' யாத்திரை.. கொண்டாட்டத்தில் காங்., தொண்டர்கள்!
ஜெய்ப்பூர்: நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்ட பாரத் ஜோடா யாத்திரை இன்றுடன் 100-வது நாளை எட்டியுள்ளது.
தமிழகத்தில் கன்னியாகுமரியில் பிரம்மாண்டமாக தொடங்கிய இந்த நடைப்பயணம், 100-வது நாளில் ராஜஸ்தானை சென்று அடைந்துள்ளது.
பாரத் ஜோடா நடைப்பயணத்தின் 100-வது நாளையொட்டி ராஜஸ்தானில் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் தொண்டர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

கன்னியாகுமரியில் தொடங்கிய யாத்திரை
மத்தியில் ஆட்சிப்புரியும் பாஜக அரசு, இந்தியர்களை மத ரீதியில் பிளவுப்படுத்துவதாக குற்றம்சாட்டி வந்த ராகுல் காந்தி, நாட்டு மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி தொடங்கியது தான் பாரத் ஜோடா யாத்திரை. கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி தொடங்கிய இந்த யாத்திரையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த யாத்திரையின் போது தான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்களுடன் உரையாடிய படியும், அவர்களின் குறைகளை கேட்டறிந்தபடியும் சென்றார் ராகுல் காந்தி.

விமர்சனங்களுக்கு குறைவில்லாத யாத்திரை
ராகுல் காந்தியின் இந்த நடைப்பயணத்தில் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டுள்ளனர். தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் என 7 மாநிலங்களை கடந்து 8-வது மாநிலமாக ராஜஸ்தானில் இந்த யாத்திரை அடியெடுத்து வைத்துள்ளது. இந்த மாநிலங்களில் மொத்தம் 42 மாவட்டங்களில் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நடைபயணத்தின் போது ராகுல் காந்தி பேசிய பேச்சுகள் பாஜகவினரை பெரிதும் கோப்படுத்தியது. குறிப்பாக, மகாராஷ்டிராவில் சாவர்க்கர் மீது ராகுல் காந்தி வைத்த விமர்சனம் நாடு முழுவதும் பாஜகவினரை கொந்தளிக்க வைத்தது.

இன்று 100-வது நாள்..
இந்நிலையில், சுமார் 2,600 கி.மீ. தூரத்தை கடந்த இந்த பாரத் ஜோடா யாத்திரை இன்று 100-வது நாளை எட்டியுள்ளது. ராஜஸ்தானின் டெளஸா மாவட்டத்திற்கு தற்போது இந்த யாத்திரை வந்தடைந்துள்ளது. இங்கிருந்து ஜெய்ப்பூருக்கு நடைபயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி, அங்குள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் வைத்து இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கவுள்ளனர். பின்னர் ஜெய்ப்பூரில் உள்ள ஆல்பர்ட் அரங்கில் நடைபெறும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்கவுள்ளார்.

விமர்சனங்களை கண்டுகொள்ளாத ராகுல்
இதனிடையே, ராகுல் காந்தியின் இந்த ஜோடா யாத்திரை பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது. குஜராத், இமாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் நடைபெறும் போது ராகுல் எங்கேயோ நடைப்பயணம் மேற்கொண்டிருக்கிறார் என்றும், அரசியலில் அவருக்கு ஆர்வமில்லை எனவும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. குறிப்பாக, குஜராத் தேர்தலில் ராகுல் காந்தி பிரச்சாரம் கூட மேற்கொள்ள வரவில்லை என்றும் அவர் மீது விமர்சனம் வைக்கப்பட்டது. ஆனால், இதை எதையும் கண்டுகொள்ளாமல் தனது நடைப்பயணத்தில் மட்டுமே கவனம் செலு்ததி வந்தார் ராகுல் காந்தி.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications