மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் ராகுல் தான் பிரதமர்: ப.சிதம்பரம்
டெல்லி: வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்க அழைக்கப் பட்டால், ராகுல் பிரதமர் ஆவார் எனத் தெரிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்.
பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதம வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், காங்கிரஸின் பிரதம வேட்பாளராக அக்கட்சியின் துணைத்தலைவரான ராகுல் காந்தி அறிவிக்கப் படுவார் என எதிர்பார்க்கப் பட்டது.

ஆனால், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஆக்க வேண்டும் என்ற அக்கட்சியின் தொண்டர்களின் கோரிக்கையை காங்கிரஸ் கட்சி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற காரியக் கமிட்டிக் கூட்டத்தில் நிராகரித்தது. ஆனால், நாடாளுமன்ற தேர்தல் பிரசாரக் குழு தலைவர் என்ற புதிய பொறுப்பு ராகுலுக்கு வழங்கப் பட்டது.
இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலை போல் இம்முறையும் காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டால் ராகுல் காந்தி நாட்டின் தலைமை பொறுப்பை பெறுவார் எனத் தெரிவித்துள்ளார்.
டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மன்ற கூட்டதில் கலந்து கொண்டார் ப. சிதம்பரம். அப்போது அவர் பேசியதாவது, " விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் முடிவில் எநத ஒரு கட்சியும் பெரும்பான்மை பெறாது. ஒருவேளை காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டால், ராகுல் காந்தி பிரதமராக ஆவார்" எனக் கூறியுள்ளார்.
மேலும் பாரதீய ஜனதாவின் பொருளாதார மாடல் பிற்போக்கு தனமானது என்று சிதம்பரம் கூறியுள்ளார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications