பெங்களூரில் வெகு காலத்திற்கு பிறகு வெளுத்து வாங்கிய 'பகல்' மழை
பெங்களூர்: பெங்களூரில் வரலாறு காணாத அளவு பகல் நேர மழை கொட்டி தீர்த்து வருகிறது.
இன்று மதியம் தொடங்கிய மழை, மாலை வரை நீடித்தது. ஜெயநகர், வி.வி.புரம் உள்ளிட்ட மத்திய பெங்களூரில் மழை கொட்டியது. கடுமையான மழை காரணமாக மேற்கண்ட பகுதிகள், டெய்ரி சர்க்கிள், ஜேபி நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள பள்ளிகள், பாட நேரம் முடிந்த பிறகும் குழந்தைகளை வெளியே அனுப்பாமல் மழை குறைந்தபிறகே அவர்களை அனுப்பின.

வாகனங்கள் அரை மணி நேரம் தாமதமாகத்தான் பள்ளியிலிருந்து கிளம்பும் என பெற்றோருக்கு கிறைஸ்ட் பள்ளி உள்ளிட்ட சில பள்ளிகள் மெசேஜ் அனுப்பி வைத்தன. மழையால் மாலையில் டிராபிக் நெரிசலையும் நகரம் சந்தித்தது.
பகல் அரசில் இந்தளவு பெரிய அளவுக்கு சமீபகாலமாக மழை பெய்தது கிடையாது என்கிறார்கள் பெங்களூர்வாசிகள். மாலை அல்லது இரவு நேரத்தில் இப்படி பெய்து வந்தபோதிலும், பகல் நேரத்தில் மழை கொட்டித் தீர்த்தது சமீபகாலத்தில் இதுதான் முதல் முறை.
ஆனால் கிழக்கு மற்றும் தெற்கு பெங்களூரின் பல பகுதிகளில் லேசான மழைதான் பெய்தது. சில இடங்களில் மழை பெய்யவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வானிலை இலாகா வட்டாரத் தகவல்படி ஜெயநகரில் இன்று பகலில் அதிகபட்சமாக 4 செ.மீ மழை பெய்துள்ளது.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications