200 சட்டசபை தொகுதிகளில் தனித்து போட்டி.. ராஜஸ்தானில் மாயாவதி கட்சி அதிரடி!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 200 தொகுதிகளில் தனித்து போட்டியிடவுள்ளது.
200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநில சட்டசபையின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதம் முடிவடைகிறது. இதையடுத்து அந்த மாநிலத்துக்கு டிசம்பர் 7-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளது.
பாஜகவின் வசுந்தரா ராஜே மீது அந்த மாநில மக்களுக்கு அதிருப்தி நிலவி வருகிறது. எனவே இந்த சந்தர்ப்பத்தை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பயன்படுத்திக் கொள்ள பார்க்கின்றன. இந்நிலையில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்ற முடிவில் இருக்கிறது.

முழு வீச்சில்
ராஜஸ்தானில் நடைபெறவுள்ள தேர்தலில் 200 தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடவுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில துணை தலைவர் துங்காராம் கூறுகையில் ராஜஸ்தான் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளை முழு வீச்சில் செய்து வருகிறோம்.

அதிக இடங்களில்
வரும் தேர்தலில் 200 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவோம். மக்கள் காங்கிரஸ் மற்றும் பாஜக மீது அதிருப்தியில் உள்ளனர். பாஜக மீது மக்கள் கோபத்திலும் காங்கிரஸ் மீது நம்பிக்கையற்றும் உள்ளனர். எனவே 2018-இல் நடைபெறும் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் என்றார்.

6 எம்எல்ஏக்கள்
கடந்த 2013-ஆம் ஆண்டு தேர்தலில் 3.37 சதவீத வாக்குகளை பெற்று 3 இடங்களில் மட்டுமே பிஎஸ்பி வெற்றி பெற்றது. அதுபோல் 2008-ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் 7.60 சதவீத வாக்குகளை பெற்று 6 எம்எல்ஏக்களை பெற்றது.

காங்கிரஸுக்கான வாக்குகள்
மாயாவதியின் கட்சிக்கு பாரத்பூர், டோல்பூர், காராளி, சவைமதோபூர், ஆல்வார், ஹனுமன்கார், ஸ்ரீகங்காநகர், பீகானெர் ஆகிய தொகுதிகளில் தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் வாக்குகள் கணிசமாக உள்ளது. 200 தொகுதிகளில் 34 தொகுதிகள் எஸ்சி தொகுதிகள் 25 தொகுதிகள் எஸ்டி தொகுதிகளாகும். எனவே மாயாவதி எஸ்சி வாக்குகளை குறிவைத்து தனித்து போட்டியிடுகிறார். இதனால் காங்கிரஸுக்கான வாக்குகள் சிதறும் சூழல் உள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications