ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், ஜேட்லிக்கு மோடி "ஷொட்டு"... 15 பேருக்கு "கொட்டு"!
டெல்லி: சீனியர் அமைச்சர்களான ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி ஆகியோரின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளாராம். இவர்கள் கடந்த 100 நாள் மோடி ஆட்சியில் தங்களது துறை செய்த செயல்கள் குறித்த ரிப்போர்ட் கார்டை உரிய நேரத்தில் சமர்ப்பித்து மோடியிடம் நல்ல பெயர் வாங்கியுள்ளனர்.
அதேசமயம், மேனகா காந்தி உள்பட 15 அமைச்சர்கள் இன்னும் ரிப்போர்ட் கார்டே தராமல் உள்ளனராம். இவர்கள் மீது அதிருப்தியுடன் இருக்கிறாராம் மோடி. விரைவில் உங்களது ரிப்போர்ட் கார்ட் வந்தாக வேண்டும் என்று கண்டிப்புடன் கூறியுள்ளாராம் மோடி.
மோடி அரசு பதவிக்கு வந்து 100 நாட்கள் கழிந்து விட்ட நிலையில் 100 நாட்களில் தங்களது துறைகள் செய்த சாதனைகள் என்ன என்பதை ஒரு அறிக்கையாக தன்னிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று மோடி உத்தரவிட்டிருந்தார்.

நல்ல பிள்ளைகள் சில
இதில் சில அமைச்சர்கள் நல்ல பிள்ளைகளாக குறித்த காலத்தில் அறிக்கையை சமர்ப்பித்து விட்டனர்.

சுஷ்மா, ராஜ்நாத், ஜேட்லிக்குப் பாராட்டு
இவர்களில் முப்பெரும் அமைச்சர்களான சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி ஆகியோருக்கு எதிர்பார்த்தது போலவே பாராட்டுகள் கிடைத்ததாம். உங்களது பணிகள் திருப்திகரமாக உள்ளதாக மோடி பாராட்டினாராம்.

மேனகா - நஜ்மா ஹெப்துல்லா
அதேசமயம் நஜ்மா ஹெப்துல்லா, மேனகா காந்தி, ஹர்ஷவர்த்தன் உள்பட 15 அமைச்சர்கள் இன்னும் அறிக்கையே தாக்கல் செய்யவில்லையாம். இதனால் மோடி இவர்கள் மீது அதிருப்தி அடைந்துள்ளனராம்.

என்ன பண்றீங்க...
அவர்களைத் தனித் தனியாக கூப்பிட்டு என்ன பண்றீங்க என்று கேட்ட மோடி, ரிப்போர்ட் வராவிட்டால் அமைச்சர் பதவியை விட்டு விட்டு கட்சிப் பணிக்குப் போக வேண்டியதுதான் என்று கூறி விட்டாராம்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications