பாலியல் புகார் சொன்ன பத்திரிகையாளர் டெஹல்காவில் இருந்து ராஜினாமா செய்தது ஏன்?
டெல்லி: டெஹல்கா நிறுவன ஆசிரியர் தருண் தேஜ்பாலை காப்பாற்றும் வகையிலேயே அந்நிறுவனம் செயல்பட்டதாலேயே புகார் சொன்ன பத்திரிகையாளர் ராஜினாமா செய்திருக்கிறார்.
டெஹல்கா நிறுவன ஆசிரியர் தருண் தேஜ்பால் சக பெண் பத்திரிகையாளருக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதைத் தொடந்து நிர்வாக ஆசிரியர் சோமா செளத்ரிக்கு மின் அஞ்சல் மூலம் அப்பெண் பத்திரிகையாளர் புகார் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக நிறுவன ரீதியான விசாரணைகள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் போதே திடீரென தருண் தேஜ்பால் தாம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் அத்துடன் 6 மாத காலம் பதவியில் இருந்து விலகுவதாகவும் ஒரு மின் அஞ்சல் அனுப்பியிருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த சோமா செளத்ரியும் தேஜ்பாலின் மன்னிப்பு மற்றும் விலகலை பாதிக்கப்பட்ட பெண் ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்றே ஊடகங்களுக்கு தொடர்ந்து பேட்டி கொடுத்தார்.
ஆனால் தேஜ்பாலை காப்பாற்றும் வகையிலேயே சோமா செளத்ரி இப்படி பேட்டி கொடுத்தார் என்றும் இதனால் அந்நிறுவனத்திடம் இருந்து நீதி கிடைக்காது என்று கருதி தாம் ராஜினாமா செய்வதாக அப்பெண் பத்திரிகையாளர் விளக்கம் அளித்துள்ளார்.
சோமா செளத்ரிக்கு நீண்ட ராஜினாமா கடிதம் ஒன்றை அப்பெண் பத்திரிகையாளர் அனுப்பி வைத்திருக்கிறார். சோமா செளத்ரியின் செயல்பாடுகள் முழுவதுமே நிறுவனத்தின் பெயரை காப்பாற்றும் வகையிலானதாக இருக்கிறதே தவிர பாதிக்கப்பட்ட தமக்கு நீதி கிடைப்பதற்கானதாக இல்லை என்றும் எத்தனையோ பாலியல் பலாத்கார கட்டுரைகளை எழுதிய தாமே இப்போது நீதி கேட்க வேண்டிய நிலையில் இருப்பதாகவும் விவரித்திருக்கிறார்.
இந்த சூழலில் டெஹல்கா நிறுவனத்தில் தொடர்ந்தும் பணிபுரிய முடியாது என்பதாலேயே தாம் ராஜினாமா செய்கிறேன் என்றும் அப்பெண் பத்திரிகையாளர் அதில் கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications