கங்கையை சுத்தப்படுத்த கோரி உண்ணாவிரதம் இருந்த பீடாதிபதி மரணம்
வாரணாசி: சுத்தமான கங்கைக்காக உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த பீடாதிபதி மரணமடைந்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி மகாசம்சான் என்னும் பீடத்தின் பீடாதிபதியாக இருந்து வந்தவர், நாக்நாத் யோகேஷ்வர். இவர், கங்கை நதியை சுத்தப்படுத்தக்கோரி 2008-ம் ஆண்டு ஜூலை 19-ந்தேதி முதல் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வந்தார்.

ஆயிரம் நாட்கள் கடந்த நிலையில், 2011 மத்திய பிரதேச கவர்னர் ராம் நரேஷ் யாதவ் விடுத்த வேண்டுகோளை தொடர்ந்து அவர் தனது உண்ணாவிரதத்தை அப்போது கைவிட்டார்.
இந்த நிலையில் நாக்நாத் யோகேஷ்வர் கடந்த சில மாதங்களாக கங்கையை சுத்தப்படுத்த கோரியும், உத்தரகாண்ட்டில் கங்கை நதிக்கு குறுக்கே அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வாரணாசியில் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரது உடல் நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் சுந்தர்லால் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மதியம் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலுக்கான இறுதிச் சடங்கு மணிகார்னிகா பகுதியில் நேற்று மாலை நடந்தது.
கங்கையை சுத்தப்படுத்தக் கோரி உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த 2-வது பீடாதிபதி இவர் ஆவார். 2011-ல் இதே கோரிக்கைக்காக உத்தரகாண்ட்டில் சுவாமி நிகமானந்த் என்னும் பீடாதிபதி 115 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த நிலையில் உயிர் துறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications