தம்பிதுரையை பயன்படுத்தி வீட்டுக் காவலில் வைத்தது போல நடத்தப்பட்டார் சசிகலா புஷ்பா? திடுக் தகவல்
டெல்லி: மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையை பயன்படுத்தி வீட்டுக் காவலில் வைத்தது போல் சசிகலா புஷ்பா நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போயஸ் கார்டனில் ஜெயலலிதா தன்னை அறைந்ததாகவும், எம்.பி பதவியை ராஜினாமா செய்ய வற்புறுத்தியதாகவும் சசிகலா புஷ்பா ராஜ்யசபாவில் பரபரப்பாக பேசினார். தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறி அழுதார். இதனிடைய சசிகலா புஷ்பாவை கட்சியிலிருந்து நீக்குவதாக அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களுக்கு சசிகலா புஷ்பா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் வந்தபோது கூட, விமானத்தில் அங்கும் இங்கும் நகர விடவில்லை. நேற்று சென்னையில், எனது வீட்டுக்கு செல்ல கூட அனுமதிக்கவில்லை.
அதேபோல் இங்கு வந்தபோதும் என்னை எங்கும் செல்ல அனுமதிக்கவில்லை. எங்கேயும் செல்லக் கூடாது என தம்பிதுரை கட்டாயப்படுத்தினார். இருந்த போதிலும் அவருடன் சண்டை போட்டுத்தான் நேற்று மாலை எனது வீட்டிற்கு வந்தேன். எனவேதான், எனது எண்ணங்களை வெளியே தெரிவிக்க பிரஸ் மீட் கூட்ட முடியவில்லை. இதற்காகவே நாடாளுமன்றத்தில் வைத்து பேசினேன்.
என் மீதான நடவடிக்கை 2 மாதம் முன்பிருந்தே தொடங்கியது. பார்லிமென்ட்டில் என்னைப் பேசக் கூடாது என்று கார்டனில் இருந்து பூங்குன்றன் சொன்னார். எனது இந்தப் பதவியை வேறு யாரோ ஒருவருக்கு கொடுக்க விரும்புகிறார்கள். ஆனால், கண்டிப்பாக திருச்சி சிவா மேட்டருக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை.
என்னைப் பற்றி தவறாக தொடர்ந்து சி.எம்.-மிடம் யாரோ சொல்லி இருக்கிறார்கள். வாட்ஸ்-அப் படங்களும் திட்டமிட்டு அனுப்பி இருக்காங்க. அது தொடர்பாக கட்சித் தலைமையிடம் நான் புகார் கொடுத்தேன். ஆனால் என்னைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நான் ஏன் என் எம்.பி. பதவியை ராஜினாமா செய்யவேண்டும்.ஜெயா டிவியிலயே, 'சசிகலா புஷ்பா தலைமையில் மகளிர் அணி சிறப்பாகச் செயல்படுகிறது. அதற்கு அம்மா பாராட்டினார்' என்றும் செய்தி வெளியானது. எனது வாழ்வையே அதிமுகவுக்கு கொடுத்துள்ளேன். அப்போதே அம்மாவிடம் சொன்னேன்.
எனக்கு மகளிர் அணி வேண்டாம் என்று. 'நீதான் இதைச் சரியா பண்ண முடியும் என்று நம்புகிறேன்' என்று சொன்னார். அந்தச் சொல்லுக்காக தெருத் தெருவாக அலைந்து கட்சி வேலைப் பார்த்தேன். இப்போது, 'ஜஸ்ட் ரிசைன் பண்ணு' என்றால் எப்படி முடியும்? அப்போ நான் படித்த படிப்புக்கு, கட்சிக்காகச் செய்த வேலைக்கு என்ன அர்த்தம். திருச்சி சிவா விஷயத்தை இப்போது பயன்படுத்திக் கொண்டார்கள்.
ஆனால் எதிர்பாராத விதமாக என்னை மிரட்டி ராஜினாமா கடிதத்தில் கையெழுத்துப் போடச் சொன்னார்கள். நான் என்ன தப்புப் பண்ணினேன். பர்சனல் வேற. பொலிட்டிக்கல் வேற. என்னை ராஜினாமா செய்யச் சொன்னதுக்கும் திருச்சி சிவா விஷயத்திற்கும் சம்பந்தமில்லை. அதனால்தான் பார்லிமென்ட்டில் நான் மன்னிப்பு கேட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications