ராணுவ தலைமை நீதிபதியாக தல்பீர் சிங்கை நியமிக்க தடை இல்லை: உச்ச நீதிமன்றம்
டெல்லி: நாட்டின் ராணுவ தலைமை நீதிபதியாக தல்பீர் சிங்கை நியமிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ராணுவ தலைமை தளபதியாக இருக்கும் ஜெனரல் விக்ரம் சிங்கின் பதவிக்காலம் ஜூலை 31ம் தேதியுடன் முடிகிறது. ராணுவ நடைமுறைகளின்படி இரண்டு மாதங்களுக்கு முன்பே புதிய தளபதி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
இதன்படி புதிய ராணுவ தளபதியாக லெப்டிணென்ட் ஜெனரல் தல்பீர் சிங் சுஹாகை முந்தைய காங்கிரஸ் அரசு நியமித்தது.
ஆனால் புதிய ராணுவ தளபதி நியமனத்தில் குளறுபடி நடந்திருந்திருப்பதாகவும், தல்பீர் சிங் நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ராணுவ தலைமை நீதிபதி தல்பீர் சிங் நியமனத்துக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் ராணுவ தலைமை நீதிபதியாக தல்பீர் சிங்கை நியமிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.