ஜாமீனுக்கு ரூ.10,000 கோடி- செபிக்கு ரூ36,000 கோடி .. சஹாரா தலைவருக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி
டெல்லி: முறைகேடாக நிதி திரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய்க்கு ஜாமீன் வழங்க ரூ.5000 கோடி பிணைத் தொகையை ரொக்கமாகவும், ரூ.5000 கோடிக்கான வங்கி உத்தரவாதத்தையும் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. இதனால் சுப்ரதா ராய் ஜாமீனில் வெளிவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் கடந்த ஒரு ஆண்டுகாலமாக சிறையில் இருக்கிறார். அவர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த மனு இன்று நீதிபதி டி.எஸ்.தாகூர் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்னர் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய்க்கு ஜாமீன் வழங்க வேண்டுமானால் அவர் ரூ.5000 கோடி பிணைத் தொகையை ரொக்கமாகவும், ரூ.5000 கோடிக்கான வங்கி உத்ரவாதத்தையும் வழங்க வேண்டும்.
மேலும் செபி அமைப்புக்கு அவர் வழங்க வேண்டிய ரூ.36,000 கோடியையும் 18 தவணைகளில் செலுத்த வேண்டும். ஒவ்வொரு முறையும் தவணைத் தொகையாக ரூ.3000 கோடி செலுத்த வேண்டும்.
இத்தவணையை செலுத்தத் தவறினால் சுப்ரதா ராய் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். மேலும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் பாஸ்போர்ட்டை போலீஸில் ஒப்படைக்க வேண்டும். நாட்டின் பிற பகுதிகளுக்குச் சென்றாலும் அது குறித்து டெல்லி போலீஸுக்கு முழு விபரத்தை அளிக்க வேண்டும் என நிபந்தனைகளை விதித்தனர்.
ஆனால், சுப்ரதா தரப்பில் இருந்து வங்கி உத்ரவாதமாக ரூ.5000 கோடி செலுத்த இயலாது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர் தொடர்ந்தும் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
-
உளவுத்துறையை விட மோசம்.. சங்கீதா, சஞ்சய் போட்ட போடு.. அப்படியே அடங்கிய விஜய்.. இப்படி வேற நடக்குதா? -
சிதம்பரம் மூலம் ஸ்டாலினுக்கு ராகுல் அனுப்பிய மெசேஜ்.. சிக்கலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி -
திமுக ஆதரவாளர்.. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை மாற்ற ராகுல் முடிவு? புதிய தலை யார்? -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் கேம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ அப்டேட்.. நோட் பண்ணுங்க -
"எவ்வளவு செலவானாலும் ஓகே.." கோடிகளை கொட்டும் அல்ட்ரா செல்வந்தர்கள்! இதுதான் துபாய் எஸ்கேப் பிளான் -
Lunar Eclipse: ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம்.. கண்டுகளித்த மக்கள்.. என்னவெல்லாம் செய்யக்கூடாது -
Rajya sabha: மாநிலங்களவை தேர்தல்! திமுக வேட்பாளர்கள் யார் யார்? -
வீடு கொடுத்தவனுக்கே ஆபத்து.. ஏமாற்றப்பட்டதா அரபு நாடுகள்? அமெரிக்கா மீது கொதிக்கும் 'ஷேக்குகள்'! -
ஆபரேஷன் 200.. காங்கிரஸ் ‘பிக் பிளானை’ கண்டுபிடித்த ஸ்டாலின்.. முளையிலேயே கிள்ளிய அறிவாலயம்! -
ஓபிஎஸ் வந்து.. 1 வாரம் கூட ஆகலியே.. அதற்குள் அதிரும் அறிவாலய கதவுகள்.. திமுகவில் ஏடாகூட பிரச்சனை! -
ஹார்முஸ் நீரிணை உலகத்தின் இதயம்.. இந்தியா டூ அமெரிக்காவை ஆடிப்போக வைத்த ஈரான் செயல் -
தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் டெல்லிக்கு தந்த ட்விஸ்ட்.. ராகுல் காந்தி ப சிதம்பரத்தை அனுப்பியது ஏன்?












Click it and Unblock the Notifications