ஜாமீனுக்கு ரூ.10,000 கோடி- செபிக்கு ரூ36,000 கோடி .. சஹாரா தலைவருக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி
டெல்லி: முறைகேடாக நிதி திரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய்க்கு ஜாமீன் வழங்க ரூ.5000 கோடி பிணைத் தொகையை ரொக்கமாகவும், ரூ.5000 கோடிக்கான வங்கி உத்தரவாதத்தையும் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. இதனால் சுப்ரதா ராய் ஜாமீனில் வெளிவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் கடந்த ஒரு ஆண்டுகாலமாக சிறையில் இருக்கிறார். அவர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த மனு இன்று நீதிபதி டி.எஸ்.தாகூர் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்னர் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய்க்கு ஜாமீன் வழங்க வேண்டுமானால் அவர் ரூ.5000 கோடி பிணைத் தொகையை ரொக்கமாகவும், ரூ.5000 கோடிக்கான வங்கி உத்ரவாதத்தையும் வழங்க வேண்டும்.
மேலும் செபி அமைப்புக்கு அவர் வழங்க வேண்டிய ரூ.36,000 கோடியையும் 18 தவணைகளில் செலுத்த வேண்டும். ஒவ்வொரு முறையும் தவணைத் தொகையாக ரூ.3000 கோடி செலுத்த வேண்டும்.
இத்தவணையை செலுத்தத் தவறினால் சுப்ரதா ராய் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். மேலும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் பாஸ்போர்ட்டை போலீஸில் ஒப்படைக்க வேண்டும். நாட்டின் பிற பகுதிகளுக்குச் சென்றாலும் அது குறித்து டெல்லி போலீஸுக்கு முழு விபரத்தை அளிக்க வேண்டும் என நிபந்தனைகளை விதித்தனர்.
ஆனால், சுப்ரதா தரப்பில் இருந்து வங்கி உத்ரவாதமாக ரூ.5000 கோடி செலுத்த இயலாது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர் தொடர்ந்தும் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications