சென்னை பெண்கள் உடல் தெரியாத வகையில் டிரஸ் போடுவதால் பாலியல் குற்றங்கள் குறைவு- ம.பி. அமைச்சர்

சமீபத்தில்தான் சென்னைக்குப் போயிருந்தார் பாபுலால் கெளர். அங்கிருந்து போபால் திரும்பிய அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் செயல்கள் மிகவும் குறைவாகவே இருக்கிறது.
இதற்கு முக்கியக் காரணம், சென்னை பெண்கள் உடல் தெரியும்படி உடை அணிவதில்லை. மாறாக முழுமையாக உடலை மறைக்கும் வகையிலான உடைகளை அணிகிறார்கள். கடவுள் பக்தி மிக்கவர்களாக உள்ளனர். பயபக்தியுடன் கோவிலுக்கு தினசரி போகிறார்கள்.
எனவேதான் ம.பி. தலைநகர் போபாலுடன் ஒப்பிடுகையில் தமிழகத் தலைநகரில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறைவாக உள்ளன.
சென்னையில் 2012ல் பதிவான பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் செயல்களின் எண்ணிக்கை 19.32 சதவீதம்தான். ஆனால் போபாலில் இது 71.38 ஆக இருந்தது. மேலும் ஒட்டுமொத்த மத்தியப் பிரதேசத்திலும் அது 71.38 சதவீதமாக இருந்தது.
சென்னைக்கு நான் போயிருந்தபோது பல மூத்த காவல்துறை அதிகாரிகளைச் சந்தித்தேன. அவர்கள் என்னிடம் சென்னைப் பெண்கள் உடலை மறைக்கும் வகையிலான ஆடைகளையே அணிவது வழக்கம் என்றும், கோவிலுக்கு அடிக்கடி போவதை வழக்கமாகக் கொண்டவர்கள் என்றும் தெரிவித்தனர்.
இதன் காரணமாகவே பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தங்களது மாநிலத் தலைநகரத்தில் பெண்களுக்கு எதிரான வக்கிரச் செயல்கள் வெகு குறைவாக இருப்பதாக அவர்கள் என்னிடம் தெரிவித்தனர் என்றார்.
என்னா ஒரு லாஜிக்...!
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications