பெண்களின் செல்ஃபோன் எண்களை விலைக்கு விற்கும் ரீசார்ஜ் கடைகள்.. ஒரு ஷாக் ரிப்போர்ட் !
பெண்களின் செல்ஃபோன் எண்கள் விலைக்கு விற்கப்படும் சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்து வருவது அம்பலமாகியுள்ளது.
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் அழகான பெண்களின் செல்ஃபோன் எண்கள் ரீசார்ஜ் கடைகளில் ரூ.50 முதல் ரூ.500 வரை விற்கப்படும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
நமது வாழ்வில் மொபைல் போன் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அதன் மூலம் அலுவலக மற்றும் அன்றாட பணிகளை மேற்கொள்ள நமக்கு உதவுவது ஸ்மார்ட் போன் என்னும் உயர்வகை மொபைல் போன் ஆகும்.

இதில் 3ஜி, 4ஜி இணைப்பு வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் போன்கள் நம் அலுவலக மற்றும் சொந்த பணிகளை உள்ளங்கைகளுக்குள் கொண்டு வருகின்றன. அதேநேரம் செல்போனை பொழுதுபோக்குக்காக பயன்படுத்துவோரும் ஏராளம்.
பள்ளி மாணவர்களில் இருந்து தொழில் அதிபர்கள் வரை அவரவர் தேவைக்கு ஏற்றவாறு மொபைல் போனை பயன்படுத்துகின்றனர். ஆனால் மொபைல் போன் வைத்திருப்பவர்களில் அதிகமான பேர் ப்ரீபெய்டு கனெக்ஷன் தான் உபயோகப் படுத்துகிறார்கள்.
சமீப காலமாக நகைக்கடைக்கு அடுத்து நாட்டில் கூட்டம் அதிகமாக உள்ள இடம் ரீ சார்ஜ் கடைகள். அதிலும் குறிப்பாக இளம்பெண்கள். பத்து ரூபாயிலிருந்து தொடங்கி ப்ரீ-பெய்டு மொபைலுக்கு இங்கே தான் டாப்-அப் செய்கிறார்கள். அங்குதான் தற்போது பிரச்சனை ஆரம்பித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அழகான பெண்களின் செல்ஃபோன் எண்கள் ரீசார்ஜ் கடைகளில் 500 ரூபாய்க்கு விற்கப்படும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. முன்பின் அறிமுகம் இல்லாத நபர்கள், பெண்களின் செல்ஃபோனுக்கு அழைத்து அடிக்கடி தொல்லை தருவதாக மாநில முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு புகார் வந்தது.
இதையடுத்து உதவி மையம் ஒன்றை அமைத்தார் அகிலேஷ். மேலும் மொபைல் போன்களில் பெண்கள் கிண்டல் மற்றும் கேலி செய்யபட்டால் புகார் தெரிவிக்க சிறப்பு எண் 1090 என அறிவித்தார். இதன்பின்னர் முதலமைச்சரின் அவசர உதவி எண்ணுக்கு புகார்கள் குவிந்தன.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பெண்கள் ரீசார்ஜ் செய்யும் கடைகளிலிருந்து அவர்களது எண்கள் விற்கப்பட்டது வெளிச்சத்துக்கு வந்தது. பெண்களின் அழகைப் பொருத்து 50 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்படுவதாக அதிர்ச்சித் தகவலும் கிடைத்தது.
கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 6 லட்சம் புகார்கள் வந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தப் புகார்கள் பதிவான பட்டியலில் லக்னோ, கான்பூர், அலகாபாத், வாரணாசி, ஆக்ரா ஆகிய மாவட்டங்கள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications