மோடி மார்ச் 13-ல் இலங்கை செல்கிறார்! 28 ஆண்டுகளுக்குப் பின் இந்திய பிரதமரின் முதல் பயணம்!!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் 13-ந் தேதி இலங்கை வருகைதர உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கடந்த 28 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் அதிகாரப்பூர்வமாக இலங்கை பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை.
இந்திய பிரதமராக இருந்த போது ராஜிவ் காந்தி 1987ஆம் ஆண்டு அரசு முறைப் பயணமான இலங்கை சென்றிருந்தார். அப்போதுதான் இந்தியா-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன் பின்னர் 2008 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் சார்க் மாநாட்டுக்காக இலங்கை சென்றிருந்தார். 2013ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டை பிரதமராக இருந்த மன்மோகன்சிங் புறக்கணித்திருந்தார்.
இந்நிலையில் 28 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு மார்ச் 13-ந் தேதியன்று அரசு முறை பயணம் மேற்கொள்கிறார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனைத் தெரிவித்தார். பிரதமர் மோடி மார்ச் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை இலங்கையில் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார். இந்தியாவுடன் அணு உலை அமைத்தல் உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications