பின்லேடன் கொல்லப்பட்டதற்காக விடிய விடிய அழுதவர் சோனியா காந்தி.. நக்வி தாக்கு
கான்பூர்: ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டபோது அன்று இரவு முழுவதும் அழுதவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி என்று விமர்சித்துள்ளார் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி.
நக்வியின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நக்வி பேச்சுக்கு பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் கோரியுள்ளனர்.
கான்பூரில் இதுகுறித்து நக்வி அளித்துள்ள ஒரு பேட்டியில் 2008ம் ஆண்டு பட்லா ஹவுஸ் என்கவுண்டரில் சில தீவிரவாதிகள் கொல்லப்பட்டபோது அதற்காக வருத்தம் அடைந்தவர் சோனியா காந்தி. இதை நான் சொல்லவில்லை. அக்கட்சியின் மூத்த தலைவரான சல்மான் குர்ஷித் கூறியதுதான் இது.

பட்லாஹவுஸ் தீவிரவாதிகளுக்காக அழுதார் சோனியா காந்தி குர்ஷித்தே கூறியுள்ளார். இந்தத் தீவிரவாதிகள் என்றில்லை பின்லேடன் கொல்லப்பட்டபோதும் கூட இரவு முழுவதும் சோனியா சோகமாக இருந்தார், அழுதார். இதையும் நான் கூறவில்லை. காங்கிரஸ் தலைவர்கள் கூறியதுதான் இது.
சோனியா காந்திக்கு நாட்டின் மீது பற்றோ, பாசமோ இல்லை. நாட்டின் பெயரைக் கெடு்ப்பதில்தான் அவருக்கு ஆர்வம் அதிகம். அரசியல் லாபத்திற்காக எப்படி வேண்டுமானாலும் அவர் நாட்டின் பெயரைக் கெடுப்பார் என்றார் நக்வி.
நக்வி பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர்கள், இதுதொடர்பாக நக்வியும், பாஜகவும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.












Click it and Unblock the Notifications