தலைகீழாய் போன "வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது" கோஷம்... விவரிக்கிறது புதிய ஆய்வு நூல்
பெங்களூரு: இந்தியாவின் தென் மாநிலங்கள் முன்னேற்றப் பாதையில் செல்ல வட மாநிலங்களோ மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்து வருவதை விவரிக்கும் "The Paradox of India's North-South Divide: Lessons from the States and Regions" ஆய்வு நூலை பொதுவிவகாரங்களுக்கான மையம் வெளியிட்டுள்ளது.
1950-60களில் தமிழகத்தில் தி.மு.க. முன்வைத்த முழக்கங்களில் முதன்மையானது 'வடக்கு வாழ்கிறது..தெற்கு தேய்கிறது'..அதாவது மத்திய அரசின் திட்டங்கள் பலவும் வட மாநிலங்களிலேயே செயல்படுத்தப்படுவதாகவும் தென்னிந்திய மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் விமர்சனத்தை முன்வைத்தது இந்த முழக்கம்..

இதுவே 1980களில் திராவிடர் இயக்கத்தால் 'வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு' என்ற முழக்கமாகவும் விஸ்வரூபமெடுத்தது.. காலச் சக்கரங்கள் உருண்டோட இப்போது 'தெற்கு வாழ்கிறது..வடக்கு வாடுகிறது" என்கிற நிலைமைக்கு தென்னிந்திய மாநிலங்கள் வளமையோடு உருவெடுத்து நிற்கின்றன..
இந்தியாவின் இந்த வடக்கு- தெற்கு பிரிவினை தொடர்பாக பொது விவகாரங்களுக்கான அமைப்பு ஒரு நூலை வெளியிட்டுள்ளது. இந்நூலை பொதுவிவகாரங்களுக்கான மையத்தின் நிறுவன தலைவர் சாமுவேல் பால், பெங்களூரு சமூக பொருளாதார மாற்றங்களுக்கான மையத்தின் ஆய்வாளர் கலா சீதாராமன் ஸ்ரீரதர் ஆகியோர் எழுதியுள்ளனர்.
இந்நூலின் வெளியீட்டு விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. அண்மைக் காலங்களில் வட இந்தியா, தென்னிந்தியாவுக்கான வேறுபாடுகள் எப்படி அதிகமாகி இருக்கிறது என்பதை விவரிக்கிறது இந்த நூல். குறிப்பாக தாரளமயமாக்கல் கொள்கை அமலுக்குப் பின்னர் தென்னிந்தியாவின் அசுர வளர்ச்சியைப் பற்றி தமிழகம்- உத்தரப்பிரதேசத்தின் ஒப்பீட்டுடன் ஆராய்கிறது இந்த நூல்.
இந்நூல் வெளியீட்டு விழாவில் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி எம்.என். வெங்காடாசலையா, இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன், பேராசிரியர் ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய பேராசிரியர் ராவ், வட இந்தியா- தென்னிந்தியா இடையேயான இந்த இடைவெளியை சமன் செய்யாவிட்டால் மிக மோசமான விளைவுகளை இந்தியா எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications