தமிழக வெள்ளம்: சபரிமலையில் சிறப்பு பூஜை - திருவாங்கூர் தேவசம்போர்டு ரூ.40 லட்சம் நிவாரணம்
ஆரியங்காவு: சென்னை மழை சேதத்திற்கு 40இலட்சம் ரூபாய் திருவாங்கூர் தேவசம் போர்டு சார்பில் வழங்கப்படுகிறது என அதன் தலைவர் பிறையார் கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழக மக்கள் இயற்கை பேரிடரில் இருந்து மீள வேண்டி சபரிமலை சன்னிதியில் கடந்த 15ஆம் தேதி சிறப்பு யாகங்கள்,புஷ்பாஞ்சலி உள்ளிட்ட பூஜைகள்நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கேரளமாநிலம் திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவரும்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பிறையார் கோபாலகிருஷ்ணன் இன்றுஆரியங்காவில் நடைப்பெறும் சுவாமி ஐயப்பன் திருக்கல்யாண விழாவுக்கும், அச்சன்கோவில் தேரோட்டத்திற்கு வருகை தந்த அவர் நமது "ஒன் இந்தியா"வுக்கு அளித்த பிரத்தியோக பேட்டி:

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருவாங்கூர் தேவசம் போர்டு சார்பிலும்,பணியாளர்கள்,தேவசம் போர்டு குழு உறுப்பினர்கள் என அனைவரது சார்பிலும் சுமார் 40இலட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவும்,அவர்கள் இயற்கை பேரிடரில் இருந்து மீளவும் வேண்டி சபரிமலை சன்னிதியில் கடந்த 15ஆம் தேதி சிறப்பு யாகங்கள்,புஷ்பாஞ்சலி உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 2016ஆம் ஆண்டு 65கோடி ரூபாய் செலவில் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு வளர்ச்சிப்பணிகளை செய்ய முடிவு செயப்பட்டுள்ளது.அதற்கான மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டு வருகிறது.மேலும் இங்கு ஹெலிகாப்டர் இறங்குத்தளம் நிலக்கல்லில் அமைக்க முடிவு செய்யப்பட்டாலும் அதில் நிர்வாக ரீதியான பல்வேறு ஆலோசனைகள் உள்ளது. அதனை முதல்வரோடும்,நிர்வாக குழு உறுப்பினர்களோடும் கலந்து பேசி முடிவு செயப்படும், சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சாலைகளில் வாகனப் போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு செங்கோட்டை- புனலூர் அகல ரயில்பாதை திட்டத்தை விரைந்து முடிக்க ரயில்வே அமைச்சரிடமும், இத்திட்டத்தை விரைவாக முடிக்க உறுதுணையாக இருக்க கேரளமாநில நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டால் சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் வரவு கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications