ஸ்பாட் பிக்ஸிங்: குருநாத் மெய்யப்பன் குற்றவாளி- விசாரணைக் குழு
டெல்லி: இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் என்.சீனிவாசனின் மருமகனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் காப்பாளருமான குருநாத் மெய்யப்பனுக்கு பெட்டிங், ஸ்பாட் பிக்ஸிங்கில் தொடர்பு இருப்பதாக நீதிபதி முகுல் முத்கல் கமிட்டி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றம் அமைத்த விசாரணக் குழு இது. இந்தக் குழு, கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் சூதாட்ட விவகாரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டது. இப்போது தனது விசாரணையை முடித்து அது தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
இந்த அறிக்கையில்தான் குருநாத் மெய்யப்பன் மீது கமிட்டி குற்றம் சாட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிக்கையால், பிப்ரவரி 12ம் தேதி பெங்களூரில் தொடங்கவுள்ள ஐபிஎல் ஏலம் பாதிக்கப்படுமா அல்லது தடைபடுமா என்று தெரியவில்லை.

கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளில் மிகப் பெரிய அளவில் ஸ்பாட் பிக்ஸிங், பெட்டிங் உள்ளிட்டவை நடந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட பலர் கைதானார்கள்.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில், குருநாத் மெய்யப்பனுக்கும் தொடர்பு இருப்பதாக சர்ச்சை வெடித்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாமனார் சீனிவாசனை தலைவராகக் கொண்ட கிரிக்கெட் வாரியமே இரு முன்னாள் நீதிபதிகளைக் கொண்ட ஒரு விசாரணைக் குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டது.
இதை எதிர்த்து பீகார் கிரிக்கெட் சங்கம் மனுவழக்குப் போட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், முத்கல் கமிட்டியை நியமித்து விசாரணைக்கு உத்தரவிட்டது.
இந்தக் கமிட்டி 4 மாத காலம் தீவிர விசாரணை நடத்தியது. முன்னாள் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், கும்ப்ளே, கங்குலி உள்ளிட்டோரிடமும் அது வாக்குமூலம் பெற்றது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications