விதிமுறையே இல்லாமல் தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்கிறீர்களே.. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி!
இந்திய தலைமை தேர்தல் ஆணையரை நியமிப்பதில் ஏன் விதிகளை வகுக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
டெல்லி : இந்திய தலைமை தேர்தல் ஆணையரை நியமிப்பதில் வெளிப்படைத் தன்மை ஏன் பின்பற்றப்படவில்லை என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிப்பதில் வெளிப்படைத் தன்மை இல்லை, அந்தந்த அரசுகள் வரும் போது அவர்களுக்கு ஏற்ப தலைமை தேர்தல் ஆணையர் நியமிக்கப்படுவதாகக் கூறி மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, இது வரை இந்திய தலைமை தேர்தல் ஆணையரை நியமித்தது குறித்து எந்த கருத்தையும் கூற விரும்பவில்லை. ஆனால் இனியாவது வெளிப்படைத் தன்மையோடு தலைமை தேர்தல் ஆணையரை நியமனம் செய்யலாமே என்று கேள்வி எழுப்பினார்.
தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிப்பதற்கு ஏன் பிரத்யேக சட்டம் இல்லை என்றும் நீதிமன்றம் கேட்டுள்ளது. நாடாளுமன்ற நிபுணர்கள் அமர்வு இதற்கான சட்டத்தை இயற்றுகிறதா அல்லது நீதிமன்றமே தலையிட்டு சட்டம் இயற்ற வேண்டுமா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆணையர் முக்கியமான பதவி வகிப்பதால் அவருக்கான நியமனத்தில் விதிகளை வரையறுப்பது அவசியம் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும் இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் விசாரணையை 2 மாதத்திற்கு பின்னர் ஒத்திவைத்தனர்.
இந்திய தேர்தல் ஆணையரின் பதவிக்காலம் நாளையுடன் முடியும் நிலையில் குஜராத்தை சேர்ந்த அச்சல் குமார் ஜோதி புதிய இந்திய தேர்தல் ஆணையராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள அறிவுரை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications